பங்காளிங்க..

Thursday, March 21, 2013

மாணவர் போராட்டம் தேறுமா?

தமிழர்களின் உணர்வுகளை கொன்று குவித்தவர்கள் பட்டியலில் காங்கிரஸ் நீங்கா இடம் பெற்று விட்டது. எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் இதனை மாற்ற முடியாது. விரைவினில் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் என்ற கட்சியை கலைக்க அல்லது நிரந்தரமாய் நீக்குவதற்கு மக்கள் தயாராகி வருகின்றார்கள். அதன் முதல் எழுச்சிதான் இந்த மாணவர் போராட்டம்.

இத்தனை காலமாய் மாணவர்கள் ஐபிஎல் போட்டி, சினிமா நடிகர், நடிகைகள்  பின்னால் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது காலம் மாறிவிட்டது. காங்கிரசின் கைக்கூலி போல செயல்பட்டு வந்த திமுகவை இன்றைய மாணவர்கள் ராஜினாமா செய்ய செய்து விட்டார்கள்.

நேற்று முன்தினம் கூட அவருக்கு ராஜினாமா செய்வதற்கு முழு மனதாய்  சொல்லவில்லை. ஆனால் மாணவர்கள் போராட்டத்தால் திமுக பெயர் அழிந்துவிடுமோ என்று பயந்து  இதற்க்கு மேலும் பிகு செய்தால் தமிழ்நாட்டில் திமுக எதிர்காலம் பாழாய் போகும் என்றே  ராஜினாமா செய்தார்.

நீங்கள் 2009 போரின் போதே ராஜினாமா செய்திருக்கலாமே என்ற கேள்விக்கு பதில் இன்னமும் வரவில்லை. தமிழக தேர்தல் தொகுதி பிரச்சினை வந்ததும் எப்படி உடனே ஆதரவு வாபஸ் என்று சொன்னீர்கள்???? அதே போன்று அன்றே சொல்லி இருந்தால் எத்தனை எத்தனை உயிர்களை காப்பாற்றி இருக்கலாம்!!


உண்மையில் ஈழத்  தமிழன் மீது உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால் இன்று இத்தனை உயிர்கள் அழிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். டெசோ மாநாடு போட்டதே வேஸ்ட்...அதில் டெசோ மாநாடு வெற்றிகரமாய் போட்டதற்காக ஒரு வாழ்த்து மாநாடு வேறு...வெக்கமாக இல்லையா உங்களுக்கு?? பிணத்தின் மீது ஏறி நின்று பெயர் வாங்குவதுதான் நீங்கள் ஈழத் தமிழர்களுக்கு செய்யும் நன்றிக் கடனா?

காங்கிரஸ்  கட்சி அவர்கள் எடுத்துக் கொண்ட லட்சியத்தை செவ்வனே செய்தார்கள் தமிழர்களுக்கு எதுவுமே செய்யக் கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் இருந்தே காங்கிரஸ் எட்டப்பன்களை வைத்துக் கொண்டு தமிழர்களுக்கு தொடர்ந்து வேதனைப் படுத்திக் கொண்டிருந்தார்கள். டெல்லியில் என்ன சொன்னாலும் அதை தெள்ளத் தெளிவான தமிழில் 

மாற்றிப் பேசுவதற்கு ஒரு சிதம்பரம். எப்போது எதைப் பற்றி மக்கள் கேள்வி கேட்டு போராட்டம் செய்தாலும் எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர் கலைஞரின் அறிவுரைப் படிதான் செய்கின்றோம் என்று சொல்லும் ஞானதேசிகன். அவ்வப்போது கலைஞரையும் அசிங்கப் படுத்தி  பேசுவதற்கு ஒரு இளங்கோவன், ஏன்யா, உன் ஊரு மீனவனை இந்த வேசிக்கு பிறந்த சிங்களவன் சாகடிச்சுக்கிட்டே இருந்தானே, இருக்கிறானே ...அது எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியவே இல்லையா?

தமிழினத் தலைவருகிட்டே விஷயத்தை கேட்டா அந்த அம்மா கபட நாடகம் ஆடுது, இந்த அம்மா துரோகம் பண்ணிடுச்சினு தினமும் ஒரு பக்கத்துக்கு கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கீரு?


நீங்க என்ன பண்ணீங்க னு தான் கேள்வி கேக்குறோம்...நாங்க நாடாளுமன்றத்துல அழுதோம், கதறினோம்னு சினிமா வசனம் சொல்லிக்கிட்டு இருக்கீங்களே..எதுக்குய்யா அழுவனும், கதறனும், கைல வெண்ணையை வச்சிக்கிட்டு நெய்க்கு அலைஞ்சது யாரு செஞ்ச முட்டாள்தனம், தமிழன் இளிச்சவாயன்னு வெளியே இருந்து எவனும் சொல்லவேண்டாம்..நீங்களே நிரூபிச்சு காம்பிச்சிட்டீன்களே...

ரெண்டு நாளைக்கு முன்னாடி தனியார் தொலைக்காட்சிக்கு பேசுறப்ப ஞானதேசிகன் நாங்க ஈழத் தமிழர்களுக்கு நல்லதுதான் செஞ்சிட்டு வாரோம் னு சொல்றாரு. எது பொம்பள பிள்ளைக சேலையை அவுத்து அசிங்கப்படுத்தி கொன்ன அரக்கனுக்கு சிவப்புக் கம்பளம் விரிச்சதை சொல்றீகளா? மானம் உள்ள எந்த தமிழனும் இந்த வார்த்தைய சொல்ல மாட்டான்,


மாணவர்கள் போராட்டம் இன்னும் முழுமையா வெளி வரலை...ஊருக்கு போன அத்தனை பேரும் அந்தந்த ஊரு மாணவர்களோட சேர்ந்து வீதிக்கு வரணும்....வேற கிரகத்துல இருந்து நம்ம தமிழகத்துக்கு வந்திருக்கிற அத்தனை ஜீவராசிகளும் தமிழர்களோட கலந்து நின்னு போராடனும்...அப்போதான் நியாயம் கிடைக்கும்...கார்கில் போராக இருக்கட்டும், குஜராத் பூகம்பமாகட்டும்...தமிழன்தான் முதல்ல நன்கொடை கொடுப்பான்....ஆனா தமிழக மீனவர்களை சாகடிச்ச, தமிழக பெண்களை அசிங்கப்படுத்தினா ஏன்னு கேட்க ஒரு நாதி கிடையாது!!! இதுதான் தமிழக அரசியல்வாதிகளுக்கு பொழுதுபோக்கு....


எந்த மாணவர்களும் கவலையேபட வேண்டாம்....இலங்கைத் தமிழர் பிரச்சினை முடிவிற்கு வரவே வராது. ஏன்னா வருங்கால  திமுக விற்கு, கலைஞர் போன்றவர்களுக்கு அதுதான் பொழுதுபோக்கு...வரவிட மாட்டாங்க! இன்னும் மிச்சம் மீதி உள்ளத் தமிழர்களை அவர் இன்னொருவாட்டி உண்ணாவிரதம் இருந்து சாகடிச்சிட்டுத் தான் விடுவாரு.

மாணவர்களே, உங்கள் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு காங்கிரஸ் தலைவர்கள் ரெகார்டு டான்ஸ் கூட நடத்துவார்கள், தேவைப்பட்டால் ரிகார்டு டான்ஸ் கூட ஆடுவார்கள்...ஐபிஎல் போட்டி நடத்தி அழகிகளை ஆடவிட்டு உங்கள் கவனங்களை திசை திருப்புவார்கள். ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கும் போது உங்களுக்கு நம்மினச் சகோதரிகளின் அறுத்தெறியப்பட்ட மார்புகளே தெரியவேண்டும்,


போராடுவோம்...பிராபகரன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையோடு போராடுவோம்...

ராஜபக்சே ஒழிக...ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பளம் விரித்த சோனியா தலைமை ஒழிக... சோனியாவிற்கு சால்ரா போட்ட அனைத்து கட்சிகளும் ஒழிக...

Friday, March 15, 2013

பாலச்சந்திரன், ராஜபக்சே அந்த 7 நிமிடங்கள்....

இலங்கையில் ஒரு மாபெரும் இனப்படுகொலை நடந்தேறி இருக்கின்றது. அதற்க்கு ராஜபக்சே தான் காரணம் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். தீவிரவாத இயக்கம் விடுதலைப் புலிகள் என்று இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் எப்போதுமே சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஆனால் எந்த ஒரு தீவிரவாத இயக்கத்திற்கும் இப்படி ஒரு  ஆயுதப் படை, மக்கள்படை போர்த் தளபதிகள் இருந்ததில்லை என்று உலகநாடுகளே ஆச்சரியப் பட்டுக்கொண்டிருக்கின்றன..இலங்கைக்கும், ஈழத்தமிழர்களுக்கும் பல்லாண்டு காலமாய் போர் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கையில் இதுவரை விடுதலைப் புலிகளை ஒன்றுமே செய்ய முடியவில்லை. இந்த நிலையில் யாரோ ஒருவரது உதவியால்தான் அவர்களால் விடுதலைப் புலிகளை நெருங்க முடிந்தது என்பதை பிறந்த குழந்தையும் சொல்லிவிடும்.

இலங்கையால், நிராயுதபாணியாய் செல்லும் என் தமிழின மீனவனை மட்டுமே அழிக்க முடியும். அவனால் விடுதலை புலிகளின் நாய்க்குட்டியை கூட  நெருங்க முடியாது, அவனது பலம் அவ்வளவுதான் என்பதை அவன் இன்று காலை வரை நிரூபித்துக் கொண்டிருக்கின்றான். விடுதலைப் புலிகளை அழிக்கும் மாபெரும் சக்தி இந்தியாவில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு இந்தியாவில் மடிப் பிச்சை க்கேட்டு இன்று ஈழத் தமிழர்களின் தலைவரை அழித்திருக்கின்றார்கள். ஆனால் வெட்க கேடான விஷயம் ஒரு பெண்ணாய் சோனியா காந்தி அம்மையார் ஈழத் தமிழச்சிகள் மானபங்கப்படுத்தப் பட்டதற்கு ஒருவார்த்தை கூட கண்டனம் தெரிவிக்கவில்லை.

அன்னை சோனியா காந்தியே உங்கள் கணவர் படுகொலை செய்யப் பட்ட அன்று உடன் சென்ற ஒருவர் கூட இறக்கவில்லையே...அது ஏன் என்று உங்களுக்குதெரியவில்லையா...அல்லது தெரிந்தும் மறைக்கின்றீர்களா? ராஜீவ் காந்தி என்ற ஒருவரைக் கொன்றதால் விடுதலைப் புலிகளை நாங்கள்தான் அழித்தோம் என்று தைரியமாக சொல்லுங்களேன்...அது இல்லை என்றால் ராஜபக்சேதான் போர் குற்றவாளி என்று தைரியமாய் சொல்லுங்களேன்...யாரை ஏமாற்றும் முயற்சி இது....அவர்கள் ஒரு அப்பனுக்கு பிறக்கவில்லை என்று நிரூபித்ததாலேயே இன்று அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து இருக்கின்றார்கள். பிணத்தோடு உறவு கொண்டிருக்கின்றார்கள்.  டெல்லியில் ஒரு மாணவியை கற்பழித்துக் கொன்றதற்கு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க தீர்மானம் நிறைவேற்றுகிண்றீர்கள். ஆனால் பல்லாயிரக்கணக்கான எம்மின சகோதரிகளை வன்புணர்வு கொண்டு கொன்று குவித்த இலங்கைக்கு எதிராக ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வக்கற்றுப் போய்  நிற்பதைப் பார்த்தால் யார் போர்க் குற்றவாளி என்று தெரியவில்லை.
 
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பதை சோனியா காந்தி நிரூபித்து விட்டார். தான் ஒரு பெண்ணாக இருந்தும் பெண் பச்சிளங்குழந்தை முதல் எல்லாப் பெண்களையும் நாயை விட கேவலமாய் சீரழித்த கொடுமைகள் நடந்திருந்தும் இலங்கை நட்பு நாடு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
இப்போதாவது தமிழக மக்கள் கலைஞரின் சுயரூபத்தை தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி நெருக்கடி மிகுந்த காலத்தில் கூட கூட்டணியில் இருந்து ஆதரவு வாபஸ் என்று சொல்லவில்லை. அதற்க்கு மாறாக டெசோ மாநாட்டிற்கு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைக்கின்றார்களாம் . யார் காதில் எவ்வளவு முழம் பூ சுற்றுகின்றீர்கள். ஏற்கனவே நிறைய சுற்றி விட்டீர்கள். நீங்கள் சுற்றிய பூக்கள் எல்லாம் இப்போது உதிர்ந்து கொண்டிருக்கின்றது.   ஆதரவு வாபஸ் ஒரு வார்த்தையை தவிர மற்ற எல்லா கதைகளும் விட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். வியாபாரிகள் கடைகளை அடைத்தது உங்களுக்கு ஆதரவு தெரிவித்து அல்ல...அவர்களாகவே உணர்வுபூர்வமாய் செய்து கொண்ட விஷயம் அது. இதில் கடை அடைப்பு நடந்து மாலையில் கலைஞர் அவரது சொந்த தொலைக்காட்சியில் திமுகவினர் 50000 பேர் கைது செய்து விடுதலை, வெற்றி என்று பெருமை பேசிக் கொள்கின்றார். வெற்றி என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா தலைவரே, உங்கள் டெசோ மாநாட்டு தீர்ப்பில் ஐநா எடுக்கும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தால்தான் அதற்க்கு பெயர் வெற்றி..இல்லையேல் அது தோல்விதான்.

உண்மை நிலவரம் படி திமுக, விசிக, திக ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டது. அப்படி பார்த்தால் 3 கட்சிகளை சேர்ந்த 50000 பேர்தான் இதில் கலந்து இருக்கின்றார்கள். அதில் திமுக மட்டும் 50000 பேர் என்பது மற்ற இரண்டு கட்சிகளை கேவலப் படுத்தும் விதமாய் இருக்கின்றது. அப்படி எனில் விசிக மற்றும் திகவில் இருந்து ஒரு தொண்டர்கள் கூட வரவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? வந்தவர்கள் அனைவருமே திமுகதானா? இதனை அந்த இரண்டு தலைவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். மாலையில் 27140 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை என்று மற்றொரு தொலைக்கட்சியில் செய்தி வெளியானது. திமுக,விசிக, மற்றும் திக வை சார்ந்த 27140 பேர் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகின்றது. ஆக திமுக தொண்டர்களின் எண்ணிக்கையும் படுபாதாளத்திற்கு போய்விட்டது என்பது நிரூபணமாகின்றது.

உண்மையில் பிணத்தோடு சண்டை போடுவான் ராஜபக்சே அல்லது கையில் ஆயுதமின்றி மீன் பிடிக்க செல்லும் எங்கள் மீனவனோடு சண்டை போடுவான் ராஜபக்சே. அவனுக்கு தைரியம் அவ்வளவுதான். நம்மூரில் சொல்வோமே...பொம்பளைக்கிட்டே உன் வீரத்தை காண்பிக்காதே என்று, அதுதான் அவன்...பிரபாகரனை அழிக்கும் சக்தி அவனிடம் கிடையாது. அதற்க்கு அவன் லாயக்கானவன் இல்லை. அவனுக்கு பின்னால் ஏதோ ஒரு சக்தி இருந்து அவனை ஆட்டுவித்திருக்கின்றது. அது யார் என்று தமிழனுக்கு தெரியும்...உண்மையில் பிராபாகரனை கொல்ல உதவி செய்த அந்த கொடுங்காலனே போர்க் குற்றவாளி. அது யார் என்பது உங்களுக்கு தெரியும்? பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை கண்டு ராஜபக்சே பயந்து மூத்திரம் போனாலும் போயிருப்பான். அதனால்தான் அவனை கூட அருகில் இருந்து சுட்டுக் கொண்டிருக்கின்றார்கள். வீரமரணம் எய்திய பாலச்சந்திரனுக்கு எங்களது வீரவணக்கங்கள்.


இப்போது எங்களைப் போன்ற இளைஞர்களின் சந்தேகம் என்பது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவரை வரவேற்க சென்ற தமிழக தலைவர்களில் ஒருவருக்கு கூட காயம் ஏற்படாதது எப்படி? அவருக்கு பாதுகாப்ப்பை இருந்த அதிகாரிகள் 10 பேர் மரணம் வருந்தக்கூடிய செய்தியே....ஆனால் அவரை தமிழகத்திற்கு அழைத்த தலைவர்கள் எங்கே போனார்கள்?. யார் உண்மையான குற்றவாளி?  
 
உங்கள் கண்டனங்கள் எங்களுக்கு தேவையில்லை....எங்களுக்கு தேவை...ஆக்கப்பூர்வமான நடவடிக்கை.! இலங்கைக்கு பாகிஸ்தான் எவ்வளவோ தேவலை, பெண்களை, குழந்தைகளை அவர்கள் சீரழித்தது கிடையாது...அதுதான் நிசம்...

இரண்டு தினத்திற்கு முன்பு கோயம்பேட்டில் கல்லூரி மாணவர்கள் தங்கபாலுவை விரட்டி இருக்கின்றார்கள். மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்தாராம், (தயவு செஞ்சு எல்லோரும் ஒருவாட்டி நல்லா சிரிச்சுக்கோங்க..இதை விட காமெடி உலகத்துல இருக்க முடியாது....)இதே மாணவர்கள் இத்தோடு நிற்காமல் இலங்கை வீரர்கள் அடுத்தது இந்தியாவில் ஐபிஎல் போட்டியில் விளையாட வரும்போது விரட்ட வேண்டும். அவர்கள் பங்குபெறும் போட்டிகளை நமது மாணவர்கள் உதாசீனப் படுத்த வேண்டும். தமிழகத்தை சார்ந்த விளம்பரதாரர்கள் அவர்களுக்கு சலுகைகள் அளிக்க கூடாது.  இதற்க்கு வடஇந்திய மாணவர்கள் உறுதுணையாக நிற்கவேண்டும். அப்படி நடந்தால் மாணவர்கள் ஒரு புது சரித்திரம் படிக்கலாம். காங்கிரசிற்கு முற்றுப் புள்ளி வைக்க இது ஒரு நல்ல தருணம்.
ராஜபக்சே மட்டும் போற்குற்றவாளி அல்ல! கையாலாகாத ராஜபக்சேவை போர்க்குற்றவாளி ஆக்கியிருக்கும் தீயசக்தி எது என்பதை ஆராய வேண்டும்???.