பங்காளிங்க..

Saturday, April 26, 2014

சம்மர் ஸ்பெஷல் - பெண்கள் ஆடைகள், இந்தியா இதுக்கு சரிபடாது....


நம்ம ஊருல நேர்த்திகடன் செஞ்சா அது மூட நம்பிக்கையாம்.....அதுவே இந்த மாதிரி "மூடா" நம்பிக்கையை என்னான்னு சொல்றது....

இந்தியாவுக்குள வர்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எல்லோரும் இந்தியாவுலே இருந்து எதையாவது கத்துகிட்டு போய் மாடல் ங்கிற பேருல புதுசு புதுசா செஞ்சு அனுப்புறான்...

நம்ம ஊரு பிச்சைக்காரன் வறுமைல கிழிஞ்ச சட்டைய போட்டா அவனுங்க...அதையே பேசனா போட்டுக்கிறான்.திருப்பி அதே கிழிஞ்சத நம்ம ஊரு இளசுக ஸ்டைலுனு போட்டுக்கிட்டு திரியிறானுங்க...

என்னத்த சொல்றது?????  நீங்களே பாருங்க....

ஹிந்தி வேண்டாமுன்னு சொன்னவங்களோட பேரன் எல்லாம் இந்தியிலே வெளுத்து வாங்குறான்....இந்துக்கள் நேர்த்திக்கடன் பண்ணா மூட நம்பிக்கைன்னு சொல்வாங்க...இவங்களும் உடம்புல அலகு குத்திருக்காங்க...இதை என்னா சொல்லப் போறாங்களோ???/










புழுக்கமே இருக்காது...சம்மர் ஸ்பெஷல் தானே???!!!????

Wednesday, April 23, 2014

கலைஞரின் கடைசி ஆயுதம்...


இதுதான் எனது கடைசி தேர்தல் என்று சொல்லும் கலைஞரை நம்பி நாம் ஓட்டு போட்டு விட்டால் அடுத்த வருடம் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் யார் நமக்காக காலையில் இருந்து மதியம் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள்....அய்யா கலைஞர் அவர்களே, தமிழுக்காகவும், தமிழ்  மக்களுக்காகவும் நீங்கள் உழைத்தது, இதுவரை நீங்கள் உழைத்ததற்கு நாங்கள் அனுபவித்த இன்பங்களே போதும் என்று எண்ணுகின்றோம்......

அவருக்கு கடைசி தேர்தலில் சற்று ஓய்வு கொடுப்போமே....

கட்சிக்குள் உட்பூசல் இருக்கலாம், ஆனால் கட்சியே உட்பூசலில் நிற்கின்றது...
தேர்தல் நேரத்தில் செல்வகணபதி எம் பி மீது சுடுகாட்டு கூரை ஊழல் என்று வெளிவந்திருக்கின்றது...இதையும் தாண்டி அந்த கட்சிக்கு நாம் வாக்களிப்பது வெட்க கேடானது...

திமுக மீது கோபம் என்றால் அதிமுக விற்கு வாக்களிக்கின்றோம்...அதிமுக மீது கோபம் என்றால் திமுக விற்கு வாக்களிக்கின்றோம்...ஏன் வேறு கட்சிகளே இல்லையா?

மாறுபட்ட கட்சியினை மக்கள் தேர்ந்தெடுத்து இரண்டு கட்சிகளுக்கு ஒரு மாற்றினை நாம் கொண்டு வர வேண்டும்...

திமுக ஒவ்வொரு பிரச்சாரத்திலும் நாங்கள் எவ்வளவோ செய்தோம்...அதிமுக என்ன செய்தது என்று கேட்கின்றது....

எவ்வளவோ ஊழல் அல்லது வன்முறை என்று சொல்கின்றார்களா? அல்லது என்ன சொல்ல வருகின்றார்கள் என்று தெரியவில்லை....

கலைஞரால் தனது சொந்த மகனையே சமாதானப் படுத்த முடியவில்லை...அப்புறம் எப்படி மத்திய அரசை சமாதானப் படுத்தும்?

2ஜி ஊழல் வழக்கில் திகார் சென்று வந்ததை மிகப் பெரிய தியாகமாக நினைத்து மீண்டும் ஆ.ராசாவை நீலகிரியில் நிறுத்துகின்றார்கள்....

ஒவ்வொரு சேனலும் போட்டிப் போட்டுக் கொண்டு தனது சொந்த கட்சிக்கு இருக்கும் கூட்டத்தை காண்பித்து பிரமாண்டம், பிரமாண்டம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றது...மக்கள் வெள்ளத்தில் எழுச்சியுரை, பேருரை என்று வசனம் பட்டையை கிளப்புகின்றது...

உண்மையில் மக்களே...அந்தந்த தொகுதி கவுன்சிலர்கள், மந்திரிகள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு 200 ரூவாயும், குவாட்டரும், பிரியாணியும் கொடுத்து அழைத்து வரப்படுகின்றார்கள்....நான் ஏன் இதை உறுதியாக சொல்கின்றேன் என்றால் எங்களையும் அழைத்தார்கள்...இப்போ தலைவரு வந்திடுவாரு...ஒரு அரை மணி நேரம் வந்து நில்லுங்க....அப்புறமா மேடைக்கு அந்த பக்கம் ரூவாய் தருவாங்க என்று சொல்லியே அழைத்தார்கள்....

இப்படித்தான் அந்த கூட்டம் என்பது புரிந்தது....இப்படித்தான் எல்லா கட்சிகளுமே செய்கின்றது...அதையே படமாக்கி மக்களை குழப்புகின்றார்கள்...

இந்த அம்மையார் 4000 கோடி ரூவாய் எப்படி சேர்த்தார் என்று கலைஞர் விளக்கம் சொல்கின்றார்..... அதெல்லாம் இருக்கட்டும், நீங்கள் எப்புடி இம்புட்டு கோடி ரூவாய் சம்பாதிச்சீங்க...என்று அதையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்குமே...அந்த அம்மையார் 4000 கோடி ரூவாய் சம்பாதித்தார் என்று சொல்லும்போது உங்களுக்கு மனசாட்சி உறுத்த வில்லையா? மிஸ்டர்.பார்த்த சாரதி என்றுதான் கேட்கத் தோன்றுகின்றது...

மதவாதத்தோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்று சொல்லும் கலைஞர் ஒரு வெற்று பத்திரத்தில் மக்கள் முன்னிலையில் நாளை எந்த ஒரு சூழ்நிலையிலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று சொல்ல முடியுமா?

இந்துத்துவா வை இவ்வளவு கேவலமாக விமர்சிக்கும் கலைஞரின் மகன் ஸ்டாலின் ராகு காலம் முடிந்த பிறகுதான் பிரச்சாரத்தை துவங்கினார் என்பது பத்திரிகையில் வந்த செய்தி....

ராஜாத்தி அம்மாளும், தயாளு அம்மாளும், துர்கா அம்மாவும் இன்று வரை இந்து கோவில்களில் பூஜை செய்து வழிபாடு நடத்துகின்றார்கள் என்பதும் ஊரறிந்த உண்மை...

மதவாதம் இல்லாத கட்சி அந்த கொள்கையை உடைய கட்சி என்று சொல்லும் கலைஞர் இசுலாமிய அமைப்புடனும், கிறித்துவ அமைப்புடனும் கை கோர்த்து நிற்பது வேடிக்கையாய் இருக்கின்றது.....

அவரால் எனக்கு இந்துக்களே தேவையில்லை என்று வெளிப்படையாக சொல்ல முடியுமா? இவரின் திரைக்கதைக்கும், வெட்டி கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் மட்டும் இந்துத்துவா தேவை...ஆனால் வேறு மதத்தை பார்த்து விட்டால் இந்துத்துவா ஏளனமாக தெரிகின்றது.....

நீங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்த போது அன்றாடம் செத்து மடியும் எம் தமிழ் மீனவனுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

கடுமையான மின்வெட்டிற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

கட்சத்  தீவினை காவு கொடுத்த போது நீங்கள் என்ன செய்தீர்கள்?

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலின் போது நீங்கள் என்ன செய்தீர்கள்?

கூடங்குளம் மக்கள் போராட்டம் தொடங்கிய போது நீங்கள் எங்கே சென்றீர்கள்?

ஒவ்வொரு நாளும் பெட்ரோல், கேஸ் விலை ஏறிய போது நீங்கள் எங்கே போனீர்கள்?

ஈழத் தமிழன் செத்து மடிந்த போதும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்....

கூட்டணியை விட்டும் விலக வில்லை...அதுவே கனிமொழியை கைது செய்த போது என்ன செய்தீர்கள்? 

இப்போது செல்வகணபதியை கைது செய்த போது என்ன செய்கின்றீர்கள் என்பதை உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது...செல்வகணபதி ஊழல் செய்தார் என்பது உண்மைதானா?

ஏன் உங்கள் பொன்னான வாக்குகளை வீணடிக்க வேண்டும்...இருக்கும் மற்ற நபர்களுக்கு , உங்கள் ஊர் சுயேச்சை க்கு வாக்களியுங்கள்.....அவர்களுக்கு நாம் ஏன் வாக்களிக்க கூடாது? மக்கள்தான் சிந்திக்க வேண்டும்...

Wednesday, April 16, 2014

நகம் கடிக்கும் பெண்ணே, அடக்காதே ஆசை!!!

நகம் கடிப்பதில் எப்போதும் பெண்கள்தான் முன்னணி. பயம், பதட்டம், பாதுகாப்பின்மை, ஆழ்ந்த சிந்தனையின்போது பெண்கள் நகத்தை கடித்துக்கடித்து துப்பிவிடுவார்கள். தெரிந்தோ, தெரியாமலோ தங்களிடம் இருக்கும் இந்த தேவையற்ற பழக்கம், ஆண்களிடமும் ஒட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் பெண்கள் கவனமாக இருக்கிறார்கள். “நகம் கடிப்பது பயத்தாலும், அசவுகரியத்தாலும் ஏற்படுகிறது.
இதனை தடுக்க என்ன செய்யலாம், பெண்களே கொஞ்சம் உங்களுக்கு பிடிச்சதை தேர்ந்தெடுங்க.....ஆண்களே...உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இதனை தேர்ந்தெடுங்க....