பங்காளிங்க..

Wednesday, July 4, 2018

நீங்க நாசமா போயிருவீங்கடா.......

சத்தியமா சொல்றேன், நீங்க நாசமா போயிருவீங்கடா? எங்களை குடும்பத்தோட அழிச்சிட்டீங்களே டா, எங்களை அணு, அணுவாய் சிதைச்சு சின்னா பின்னமாக்கிட்டீங்கலேடா, உங்களுக்கு நாங்க என்னடா பாவம் செஞ்சோம்? உங்க குழந்தை குட்டிக்கெல்லாம் நாங்க நல்லதுதானே டா செஞ்சோம், ஈவு இரக்கமில்லாம எங்களை கொலை செய்யுறீங்களே, என்னோட பாட்டன், முப்பாட்டன், அப்பன், சித்தப்பன், சித்தி, பாட்டி, ஆத்தா, என் மருமகனுங்க, மருமகளுங்க எல்லோருமே உங்களுக்கு சேவகம் செஞ்சிருக்கோமே யடா? உங்க பிள்ளைங்களை, உங்க பொண்டாட்டிய, உங்க அப்பன், ஆத்தாளை, உங்க அக்கா, தங்கச்சிய, உங்க அண்ணன் தம்பியை கைய, காலை வெட்டினா நீங்க சும்மா இருப்பீங்களே டா, வெக்கங்கெட்ட, மானங்கெட்ட அயோக்கியனுன்களா, 

ஏண்டா, நீங்க பொறந்ததிலே இருந்து மண்ணுக்குள்ளே போறவரைக்கும் உங்களுக்கு நாங்க ஊழியம் செஞ்சிருக்கோம், அதுக்காவது ஒரு நன்றிக்கடன் இருக்கா? நன்றிண்ணா என்னான்னு தெரியுமா உங்களுக்கு, மரியாதைங்கிற பெயருக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு, சும்மா மேடை போட்டு வெட்டியா பேசுறதை விட்டுட்டு போட்டோக்கு செல்பி எடுக்கிறத விட்டுட்டு நீங்க மூடிகிட்டு போனாலே போதும். 


நாங்க அழுகுறது உங்க காதுக்கு கேக்கவே இல்லையாடா, செவிட்டு முண்டங்களா, ஒரு காலத்துல உங்க பாட்டன், முப்பாட்டனெல்லாம் எங்களை தெய்வமா கும்பிட்டானுங்க, எவனோ ஒரு நாதாரி பேச்சை கேட்டு தெய்வம் இல்லேன்னு சொன்னதுக்காக, எங்களை தெய்வமா பாக்காம, உங்க பப்ளிசிட்டிக்காகத் தானே பாக்குறீங்க, 

உன் ஆத்தா உனக்கு அவளோட ரத்தத்தை பாலா கொடுத்தா, உன் அப்பன் உனக்கு இந்த மினிக்கிகிட்டு திரியுற உடம்பை கொடுத்தான்,  ஆனா உனக்கு உயிரை கொடுக்கிறதே எங்க வம்சம்தானடா? 

உங்க மூச்சு காத்து நாங்க கொடுத்தது, அதை கூட மறந்திட்டீங்களே, நன்றி கெட்ட மடையர்களே, நீங்கல்லாம் டாக்டருக்கு படிச்சு என்ன பிரயோசனம், என்ஜினியருக்கு படிச்சு என்ன பிரயோசனம், என் பிள்ளை குட்டிகளை, பிஞ்சு மலர்களை கொத்து, கொத்தாய் ஆய்ஞ்சு சாறு எடுக்கிறீங்களே, நாங்க திருப்பி அடிக்க மாட்டோம்கிற ஆணவத்துலேதானே இப்படி ஆட்டம் போடுறீங்க, உண்மையிலேயே கடவுள் இருக்கானா இல்லையா ன்னு எங்களுக்கு தெரியலை, உங்களை வாழ வச்ச எங்களையே வெட்டி சாகடிக்கிறீங்களே, உங்களுக்கு மனசாட்சி உறுத்தாது, உங்களோட வாழுற விபச்சாரிய கூட வாழ வச்சு அனுபவிக்கிறீங்க, ஆனா, எங்களை வாழுறதுக்கு முன்னாடியே சீரழிக்கிறீன்களே, சின்னா பின்னமாக்குறீன்களே,
உன் குடும்பத்துலே வம்சம் விருத்தி அடையலேன்னா, கோவில், கோவிலா போறீங்க, டாக்டரை தேடி போறீங்களே, எங்களோட வம்சத்தை வேரோட அறுத்து உயிரோட கொலை செய்யுறீங்களே, இது நியாயமாடா? உங்க பொறப்புல இருந்து இறப்பு வரைக்கும் எங்க வம்சத்துக்காரங்க கூடவே இருக்காங்களே, நீங்க எவனாவது எங்க பிறப்புக்கு கூட வர்றீங்களா? இல்லேன்னா எங்களோட இழவு வீட்டுக்குத்தான் வர்றீங்களா?

எங்க கண்ணு முன்னாடியே எங்க வீட்டு பொம்பளை பிள்ளைங்களை அனுபவிக்கிறீன்களே, எப்படிடா உங்களுக்கு மனசு வருது? நாங்க கிடைச்சத வச்சு வாழுரவங்கடா, உங்களை மாதிரி பேராசை பிடிச்சு, அடுத்தவன் சொத்துக்கு அலையுற சோத்து கூட்டம் நாங்க இல்லேடா? தரையிலே தவழ்ந்துக்கிட்டு தத்தளிக்கிற எங்க இனத்து ஆட்களை கைபிடிச்சு தூக்கி விட்டுத்தாண்டா எங்களுக்கு பழக்கம், உங்களை மாதிரி ரிசார்ட்ல ரூம் போட்டு ஆளையே சோலி முடிக்கிற அரசியல் எங்களுக்குள்ளே கிடையாதுடா? நீங்க எப்படி இந்த பூமிக்கு வந்தீங்களோ, அதே மாதிரிதான் நாங்களும்  இந்த பூமிக்கு வந்தோம், உங்களுக்கு பூமி தான் கடவுள்னா, எங்களுக்கும் அவதாண்டா ஆத்தா, உங்களை மாதிரி நாற்காலிக்கு சண்டை போடுற, பதவிக்கு பல்லாக்கு தூக்குற பத்தாம்பசலிங்க நாங்க இல்லை, எங்களை நம்பி வந்தவங்களை நாங்க அரவணைச்சு பாதுகாப்புதான் கொடுத்திருக்கோம், உங்களை மாதிரி இட்லி சாப்பிட்டோம், குழம்பு குடிச்சோம் னு கதை விட்டுகிட்டு இருக்கலை, 

எப்பவுமே டாஸ்மாக்ல தண்ணியடிச்சிட்டு தண்ணியிலே இருக்க மாட்டோம், எங்களுக்கு நாகரிகம் தெரியும், எங்க வீட்டு பிஞ்சு பிள்ளைங்க தலையிலே அழகா பூ வச்சு டான்ஸ் ஆடினா உங்களுக்குத்தான் பொறுக்காதே, உடனே பூவையும் பிச்சு போட்டு அவங்க ஆட்டத்தையும் அடக்கிட்டு போவீங்க! ஆனா நாங்க எதையும் தட்டி கேட்க கூடாது, அப்படித்தானே! நாங்க திருப்பி அடிக்க மாட்டோம்கிற தைரியம்,   

எங்களை அழிச்சு பேரு வாங்கினவன் ஆயிரம் பேருன்னா, எங்களை வாழ வைக்கிறேன்னு சொல்லி கேவலப்படுத்துறவன் லட்சம் பேரு, நூறு கோடிக்கும் மேல நாங்க கூட்டம், கூட்டமா வாழ்ந்திட்டு இருக்கோம், எங்கயோ ஒரு இடத்துல ஆர்கே நகர்ல கொடுத்த மாதிரி கொடுத்திட்டு ஊருக்கே கொடுத்த மாதிரி எப்படிடா பினாத்த முடியுது உங்களால? 

ஒரே ஒரு நாள் எங்களை சுத்தி நின்னுட்டு அந்த பாழாய் போன செல்போன்ல வித, விதமா படம் பிடிச்சிட்டு அப்புறம் கண்டுக்காம போயிருவீங்க, நாங்க என்னை உங்களை நம்பி வந்த ஈழத்து அகதிங்க ன்னு நினைச்சீங்களா? நேத்திக்கு கூட ஒருத்தன் பத்திரிக்கைக்காரன் முன்னாடி அப்படி என்னை ஆகா ஓகோன்னு புகழ்ந்திட்டு வித, விதமா என்னோட தோள் மேல கைய போட்டு போட்டோ எடுத்திட்டு, போயிட்டான், நான் கூட  ச்சே நம்மையும் அவனோட ஒருத்தனா பேசுறானே, நம்மையும் மதிச்சு நம்ம கூட எல்லாம் சரி, சமமா நின்னு போட்டோ எடுக்கானே, இவன் நம்ம சாதிக்காரன்னு நினைச்சேன், ஆனா இன்னிக்கு காலையிலே என் கண் முன்னாடியே என்னோட பிள்ளையே கதற, கதற...ச்சே, என்ன மானங்கெட்ட மனுசனுங்கடா நீங்க, இதுக்குத்தான் நேத்து வளைஞ்சி, வளைஞ்சி போட்டோ எடுத்தியாடா? 

எங்க க்ரூப்ல இருக்கிறதுல, நல்லவன் யாரு, கெட்டவன் யாருன்னு நாங்க பார்த்துக்கிறோம், நீங்க முதல்ல உங்ககிட்டே இருக்கிற நல்லவனுங்களை அடையாளம் காமிங்கடா பார்ப்போம், கூட இருந்தே குழி பறிக்குறது, காலை வாரிவிடுறது, நம்பிக்கை துரோகம் செய்யுறது, இதெல்லாம் ஒரு பொழப்பாடா? ஒருத்தன் கூட யோக்கியனில்லை, எவனாவது ஒருத்தன் நாங்க யோக்கியன்னு சொல்லுங்க பாப்போம், 

சட்டைய அழுக்கா போட்டுக்கிட்டு, பங்கர பக்கிரி மாதிரி இருந்திட்டா நீ நல்லவன் கிடையாது, ஊர், உலகம் சொல்லணும், நீ நல்லவன்னு, இன்னிக்கெல்லாம் காசு கொடுத்து நல்லவன்னு சொல்ல சொல்றானுங்க, 

நினைச்ச நேரத்துலே நீங்கதானடா பொண்டாட்டியையும் மாத்துவீங்க, புருசனையும் மாத்துவீங்க, ஆனா எங்க வம்சம் என்னிக்கும் அப்படி மாறினது கிடையாது, அப்படி பார்த்தா உங்களை விட நாங்க ஆயிரம் மடங்கு உசந்த சாதிதாண்டா, 

கலாச்சாரத்தை பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு என்னடா தகுதி இருக்கு, எங்களை மரபணுச் சோதனை ன்னு சொல்லி எங்களுக்குள்ளே கேவலமான உறவை உருவாக்கி பாக்குரீங்கலேயடா, த்தூ....இது கூடிக்கொடுக்கிற வேலை மாதிரிலா இருக்கு, நாங்க பாட்டுக்கு சிவனேன்னு போயிகிட்டு இருக்கோம், 

உங்களால எங்களோட அனுமதி இல்லாம ஒரு நொடி கூட வாழ முடியாது, ஆனா, நீங்க  எங்களை சாகடிக்க திட்டம் போடுறீங்க, இழவு எடுத்த நாய்களா, அரசியல்வாதி காசு பாக்குறதுக்கு உங்களை மாதிரி படிச்ச முட்டாள்களை கூப்பிட்டு திட்டம் போடுறான், அஞ்சு வருஷம் நாட்டை மேய போற நாய் பேச்சை கேட்டு ஐம்பத்தெட்டு வயசு வரைக்கும் வேலை செய்ய போற நீ அவனுக்கு ஜிங்-ஜாங் போட்டுக்கிட்டு திரியுற? 

நவீன உலகம், மின்னணு உலகம்னு உங்களை கனவு காண வைச்சு எங்களோட வம்சத்தை கொஞ்சம் கொஞ்சமா அழிக்கிறீங்க, நாங்க ஏழைங்கதான், நாங்க பீசா, பர்கர் எல்லாம் பார்த்ததே கிடையாது, பலவருஷ காலமா கிடைக்குறத சாப்பிட்டுகிட்டு வாழுறவங்கதான், 

குறைஞ்ச சம்பளத்துக்கு உங்ககிட்டே காலம்பூரா அடிமையா இருக்கோம், இதை விட உங்களுக்கு என்னடா வேணும்? நீங்க எங்களுக்கு உதவி செய்யலேன்னாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாம இருங்கலேண்டா? 

தெரியாமத்தான் கேக்குறேன், ஒரு காலத்துலே ஒத்தையடி பாதையிலே போனீங்க, என்னத்த சாதிச்சீங்க? அப்புறமா ஜல்லிக்கல்லு போட்டு போனீங்க, என்னத்த சாதீச்சீங்க, அப்புறம் தார்ரோடு போட்டு சர், புர் னு பறந்தீங்க, வெறும் அலைச்சல்தான் இருந்துச்சு, ஆனா விஷயம் எதுவும் கிடையாது, அடுத்தது, இரண்டு வழி சாலை போட்டீங்க, அங்கே ஓரமா இருந்த எங்களோட வீடுகளை இடிச்சீங்க, சரி நீங்க நல்லா இருக்கட்டும், ஊருல இருக்கிற பொண்டாட்டி பிள்ளைய பார்க்க சீக்கிரமா போயிட்டு வரட்டும், ஊரு விட்டு ஊரு போயி வியாபாரம் செஞ்சு பெருகி நாட்டை காப்பாத்தட்டும், ஊரை காப்பாத்தட்டும்னு வழி விட்டு உக்காந்தோம்,  அப்பவும் உங்களுக்கு பேராசை விடலை, 

ஏண்டா தருதலைங்களா, இம்புட்டு வேகமா போயி அப்படி என்னதாண்டா சாதிக்க போறீங்க? நாலு வழி சாலை போட்டுட்டா, அப்படி மாசம் நாப்பது லட்சம் சம்பாதிச்சிருவீன்களா? கிழிப்பீங்க? உங்களால ஒரு ம****ம் முடியாதுன்னு எனக்கும் தெரியும்?

வேணும்னா ஒன்னு செய்வீங்க, வேகமா அந்த ஊருல இருக்கிற ஒய்ன்சாப்புல போயி உன் பொண்டாட்டி தாலியை அடகு வச்சு திருப்பி அதே ரோட்ல நடுரோட்ல நாய்கூட சீண்ட முடியாத அளவுக்கு செத்து சுண்ணாம்பா கிடப்பீங்க, ஏன்னு கேக்குறதுக்கு உன் பொண்டாட்டி, பிள்ளைங்க கூட பக்கத்துலே இருக்க மாட்டாங்க, 

ரோட்டை விரிவாக்கம் அப்புறமா பண்ணுங்க, முதல்ல உங்க மனச விரிவாக்கம் பண்ணுங்கடா கபோதிகளா? டிஜிட்டல் இன்டியாவாமே, விளங்கிரும், அடப்பரதேசி பக்கி பயலுகளா? நாங்க எல்லோரும் எங்க வேலையை நிப்பாட்டி ஸ்ட்ரைக் செஞ்சோம்னு வைங்களேன், அப்புறம் நீங்க டிஜிட்டல் பொணம்தாண்டா, ஒரு வாட்டி நாங்களும் ஸ்ட்ரைக் செஞ்சு காட்டவா? நாசமா போயிருவீங்க? 

ஆனா, நாங்க அதை செய்ய மாட்டோம், ஏன்னா, உங்களை மாதிரி ஈனப்புத்தி எங்களுக்கு கிடையாது, எங்க வம்சம் எப்படி வேரருத்தாலும் சரி, உங்களை காப்பாத்துரதுக்காவே இறைவன் எங்களை படைச்சிருக்கான், அவன் சொன்ன வேலையை நாங்க கண்டிப்பா செய்வோம், உங்களை மாதிரி மனுசங்க ஜாதி கிடையாது, நாங்க "மர" சாதி டா! 

ஏண்டா, உன் சாதிக்கு ஒரு பிரச்சினைனா, எங்களை ரோட்ல வெட்டி போடுறியே, எங்க சாதிக்கு ஒரு பிரச்சினைனா, நாங்க ஒரு ஆயிரம் பேரு ஆயிரம் வீட்டுல சாயட்டுமா? நசுங்கி நாறி போயிருவீங்க? 

உங்களை மாதிரி ஈனப்பிறவி மனுசப்பிறவி நாங்க கிடையாது, மனுசங்களையும் காப்பாத்துற மானமுள்ள "மர" சாதீ டா! 

சமீபத்தில் நான்கு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை, தங்க நாற்கர சாலை என்று விவாதித்து கொண்டிருக்கிறோம், ஆனால் ஒரே ஒரு நிமிடம் இதை யாருமே சிந்திக்கவில்லையே, நூற்றிஎன்பது கிலோ மீட்டர் வேகத்தில் சென்று அங்கே என்ன புடுங்க போகிறோம் என்று தெரியவில்லை, போகும் வழியில் இயற்கையை, இயற்கை அன்னையின் பிள்ளைகளை ரசித்து கொண்டே மெல்ல சென்றால் என்ன? ஏன் அத்தனை வேகம்? அவ்வளவு பெரிய சாலை? வேகமாக சென்று கடந்த இரண்டு தலைமுறைகளில் நாம் சாதித்தது என்ன? ஒன்றுமே இல்லையே, அரசியல்வாதியின் அவசர தேவைக்கு அகலமான ரோடு? அன்றாடங்காய்ச்சிக்கு அல்வாவா? 

மரங்களை வளர்ப்போம், அனைத்து உயிர்களையும் காப்போம்!  

சாலைகள் போடுவதற்கு ஐயாயிரம் மரங்களை வெட்டி சாய்க்கின்றோம்,  இதற்குள் அம்பதாயிரம் மரங்களை உருவாக்கியிருக்க வேண்டுமே? அதை யாருமே செய்யவில்லையே! இனிமேல் ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு மரத்தை நட்டு வைத்து விட்டு (அன்று ஒரு நாள் மட்டும் தண்ணீர் ஊற்றி விட்டு) அப்புறம் கண்டு கொள்ளாமல் செல்வதெல்லாம் ஒரு பொழைப்பா? வெட்டுறது ஈசி, ஆனால் வளர்ப்பது கஷ்டம், ஆனால் நமக்காக தானாகவே வளரும் அந்த வம்சத்தை, தலைமுறையை நாமே அழிப்பது நியாயமா? 

கீச்! கீச்! கீச்! ஊரின் ஒதுக்குபுறத்தில் தூக்க கலக்கமானதால், வண்டியை புளியமரத்தடியில் நிறுத்தி விட்டு காற்று வாங்கி கொண்டே அசந்து தூங்கி போனேன்! கனவில் மரம் கொடுத்த பேட்டியை தான் மேலே கூறியிருக்கிறேன், என்ன ஒரு தீர்க்கம், என்ன ஒரு கோபம் அந்த "மர" சாதிக்கு? உண்மைதானே! 

(இதில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல )  

Wednesday, April 18, 2018

3 சிறுமிகள், 30 பெண்கள், 300 இரவுகள் - எங்க வீட்டு சாந்தி முகூர்த்தம், விரைவில் உங்கள் உளர்ஸ் டிவியில்......

 இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உரிய பதிவு. அந்த சானலுக்கு அந்த ப்ரோகிராமுக்கு தடை சொல்லுங்கள். ஏதாவது ஒரு ஊடகம் துணிவிருந்தால் ஸ்டெர்லைட் ஆலையின் விபரீதங்களை சொல்லுங்கள், காவிரி பிரச்சினையின்  கண்றாவிகளை சொல்லுங்கள், மரம் வளர்க்க சொல்லிகொடுங்கள், தண்ணீர் சேகரிக்க சொல்லிக்கொடுங்கள், தான தர்மம் வழங்க சொல்லிக்கொடுங்கள், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வினை பற்றி சொல்லிக்கொடுங்கள், தயவு செய்து மாமா வேலை பார்க்காதீர்கள், 

தமிழ் நாட்டில் ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் ஓடிக்கொண்டிருக்கிறது, எவன் நாசமாக போனால் நமக்கென்ன என்று பெண்களை கொச்சை படுத்தும் ஒரு கும்பல் தமிழ்நாட்டில் ஊடுருவி கொண்டிருக்கிறது, கல்லூரி பேராசிரியையின் காமலீலைகள், வாட்சப் பில் பரவலாகி கொண்டிருக்கிறது, அது ஒரு பக்கம் எனில், கேவலமான கான்செப்ட்டை ஸ்க்ரிப்ட் தயார் செய்து பெண்களை போகப் பொருளாக மாற்றி ஒரு அண்ணிடம் அடகு வைக்கும் அப்பா, அம்மாக்கள், ஒரு ஆணுக்கு அலையும் பெண்ணாக பெண்ணை கேவலப்படுத்தியிருப்பதும், அதற்கு பொது மக்களிடம் கருத்து கேட்பதும் மிகவும் கேவலமான செயலே, தமிழ்நாட்டு கலாச்சாரம் எங்கே போயிக் கொண்டிருக்கிறது,? 

மகளிர் ஆணையமும் தூங்கி கொண்டிருப்பது ஆச்சரியத்தை தருகின்றது,  இதை ஒரு பொழுது போக்காக பார்க்க வேண்டும் என்று சொல்பவர்கள், உங்க வீட்டு பெண்ணை ஆர்யா கூட அனுப்பி வைப்பீங்களா?
அந்த கேடுகெட்ட சுயம்வரத்தில் பங்கு கொள்ளும் அந்த பெண்ணை தேர்ந்தெடுக்கும் மாப்பிள்ளையின் பார்வை எப்படி இருக்கும்? 

குடும்பமே சேர்ந்து கொண்டாட இது என்ன பிறந்தநாள் விழாவா? கலாச்சார சீர்கேட்டின் உச்ச கட்டம், இதை சொன்னதும், ஒருவர் என்னிடம் உங்களுக்கு பொறாமை வயித்தெரிச்சல் என்று சொன்னார், அதே நபரிடம் திருப்பி கேட்டேன், நாளை உங்கள் பொண்ணை இதே மாதிரி ஒரு பிரபலத்திற்கு ஜோடியாக அனுப்பி வைப்பீர்களா என்று, கல்லூரி பெண்களும், பள்ளி மாணவிகளும், இதைத்தான் விரும்பி பார்க்க வைத்துள்ளது, இந்த சமுதாயம், 

கேட்டால் பெண்ணின் சுதந்திரத்தை கட்டுபடுத்தாதே என்று எகத்தாளம் வேறு, இதுவா பெண்ணின் சுதந்திரம், பெண் சாதிக்க பிறந்தவள், சாக்கடை அல்ல, எல்லா பன்னிகளும் உருண்டு மேய்ந்து செல்ல, பெண் அமைதியானவள் என்று சொல்ல காரணம் தென்றலை போன்றவள், அவள் புயலாகவும் மாறுவாள் என்பதற்காக!  

எதிர்காலத்தில் இந்த சமுதாயம் எப்படி மாறிப்போகும்? எந்தளவிற்கு தரம் தாழ்ந்து போகும், பொருளாதார சூழ்நிலைகள் சரியில்லையே, ஒரு நடுத்தர, ஏழை குடும்பங்களை சார்ந்த பெண்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? எந்த எதிர்விளைவுகளையும் பற்றி சிந்திக்காத ஒரு தொலைகாட்சி ஊடகம்

ஏதாவது ஒரு ஊடகம் சாதித்த பெண்மணிகள் என்று ப்ரோக்ராம் எடுத்து வெளியிட்டுள்ளதா? சமுதாயத்தில் அவர்கள் பட்ட வேதனைகளை எடுத்து சொல்லுகிறதா? அதை விட்டுட்டு தேவையில்லாத ஆசைகளை வன்மங்களை தூண்டி பெண்களை கில்லுக்கீரையாக்கி இருக்கிறது, ஆர்யாவுக்கு வேண்டுமென்றால் இது டைம் பாசாக இருக்கலாம், ஆனால் எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றான், நாளை எங்க வீட்டு சாந்தி முகூர்த்தம் என்றும் கூட ஒளிபரப்பு செய்யும், அதையும் வேடிக்கை பார்க்கும், பொது மக்களிடம் கருத்தும் கேட்டு அவர்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக்கொள்வார்கள், ஆனால் அவமானப்படுவது யார்?   

ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி ஒரு மாவட்டமே போராடி கொண்டிருக்கிறது, மறு பக்கம் காவிரி மேலாண்மை வாரியம் வைக்க கோரி தமிழ்நாடே பற்றி எரிகிறது,

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத ஒரு ஊடகம் மாமா வேலை பார்த்து கொண்டிருக்கிறது, பெண்ணை இன்னும் போக பொருளாக அடிமைப்படுத்த நினைக்கிறது ஒரு கும்பல்,

எவ்வளவு வக்கிரமான, கீழ்த்தரமான ஒரு செயல், ஒரு ஆணை தேடி முப்பது பெண்கள் திருமணத்திற்கு அலைவது போல ஒரு ப்ரோக்ராம், அதில் நாயகனாக வரும் ஆர்யா அங்கே பங்கு பெரும் ஒவ்வொரு பெண்ணுடனும் டான்ஸ் ஆடுகிறார், மருதாணி போடுகிறார், அவர்களோடு சேர்ந்து கூத்தடிக்கின்றார்,

நாட்டு பிரச்சனைகளை மறைக்க இந்த மாதிரியான செயற்கைகளை உருவாக்கி பேட்டிஎடுக்கிரார்கள், மானங்கெட்ட தமிழர்களே (இந்த கலாச்சார சீரழிவிற்கு ஆதரவாக பேட்டி கொடுப்பவர்களைத்தான் ) சொல்கின்றேன்,

உங்கள் வீட்டு பெண் இப்படி ஒரே ஆணோடு சுயம்வரம் செய்ய ஏற்றுக்கொள்வீர்களா? அப்படியெனில் இதற்கு ஆதரவு கொடுங்கள், கலர்ஸ் தமிழ் என்றொரு சானல், ஆர்யா மற்றும் 3 பெண்களை தேர்ந்தெடுக்கின்றாராம், இதுவா பெருமை, போதும் பெண்களை இழிவுபடுத்தும் கீழ்த்தரமான செயல், நிறுத்துங்கள்,

ஒரு எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதற்கு இந்தியாவே பற்றி எரிகிறது, ஆனால் எதை பற்றியும் கண்டுகொள்ளாத ஒரு அரசாங்கம்,

ஆசிபா விற்கு ஆதரவு கொடுப்பதும் இதே இளைஞர்கள்தான், இந்த மாதிரியான அலங்கோலங்களுக்கு ஆதரவு கொடுப்பதும் நீங்கள்தானா? அப்படியெனில் ஆசிபா விற்கு கொடுக்கும் ஆதரவு போலியானதா? 

விளம்பர இடைவேளைக்கு பிறகு கலர்ஸ் தமிழ் வழங்கும் முதலிரவு தொடரும், இப்படியும் நாளை போடுவார்கள், சினிமா கதாபாத்திரங்களில் கடவுளின் பெயரில் ஒருத்தி தாசி வேடத்தில் வருகிறாள் என்பதற்காக தியேட்டரையே அடித்து நொறுக்கியவர்கள் தமிழர்கள், இன்று அடுத்தவரின் அந்தரங்கங்களை படம் எடுத்து காசு பார்க்கும் கூட்டத்திற்கு கரகோஷம் வேறா? 

மானமுள்ள தமிழர்கள், உடனடியாக இந்த நிகழ்ச்சியை நிறுத்துங்கள், பெண் பிள்ளைகளின் நெஞ்சங்களில் நஞ்சினை விதைக்காதீர்கள், அவளுக்குள் தேவையற்ற கற்பனைகளை வளர்த்து அவளது எதிர்பார்ப்புகளை கொச்சைபடுத்தாதீர்கள், பாரத் மாதா கி "ச்சே" பெண் வழக்கறிஞர்களே, இந்த நிகழ்ச்சி உங்களை காயப்படுத்தவில்லையா? இழிவுபடுத்தவில்லையா? 

Saturday, April 14, 2018

வாட்டாள் நாகராஜனுக்கு பகிரங்க சவால்!


 தமிழ் நாட்டில் மட்டுமே இந்த கேவல கூத்துக்கள் அரங்கேறும் என்பதற்கு காவிரி மேலாண்மை வாரியம் ஒரு சான்று,
இது எப்படி இருக்கிறது தெரியுமா? சில கிராம வழக்குகளில் பெண்ணை கெடுத்தவரே அவளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று வழங்கும் தீர்ப்பை போல இருக்கிறது, 

அதாவது திமுக ஆட்சியில் இருக்கும் போது காவிரி நதி நீர் பற்றி அந்த பிரச்சினைகள் வரும்போது வாயே திறக்க மாட்டார்கள், எதிர் கட்சியாக இருக்கும் அதிமுக வும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று ஆடுவார்கள், ஆனால் ஒருவருமே இந்த அம்பது ஆண்டுகால ஆட்சியில் ஒரு ஆணியும் புடுங்கலை, இந்த உதவாக்கரை கூட்டணி கட்சிகள், உதிரி கட்சிகள் மட்டும் யோக்கியமா என்ன?  

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவர்களுடைய கட்சியை காப்பாற்ற இந்த இரண்டு ஜாம்பவான் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, ஓட்டு போட்டுவிட்டு திருப்பி ஒரு கோரிக்கையை வைப்பார்கள், கோரிக்கை என்பது நாட்டிற்காக இருக்காது, கட்சி வளர்ச்சி அல்லது தொகுதிக்குள் போயிட்டு வருவதற்கு) கொஞ்சம் செலவுக்கு காசு என்று கேட்பார்கள், கேட்டது கிடைக்காவிட்டால் நாங்கள் வெளிநடப்பு செய்கின்றோம் என்று மக்களை கூமுட்டை ஆக்கிவிட்டு சட்டசபையில் எதிர்வரிசையில் சென்று உக்காந்து கொண்டு இந்த ஆட்சியை கலையுங்கள், சட்ட ஒழுங்கு சரியில்லை, சட்டை பொத்தான் சரியில்லை என்று லூசுத்தனமாக கூவிக்கொண்டிருப்பார்கள், 

எவனாவது ஒருத்தன், ஒரு கட்சித் தலைவன் இந்த விஷயத்தை மாற்றி அமைச்சிருக்கானா பாருங்க, இந்த வைகோ இருக்காரு பாருங்க, அவர் நிதானமா நடந்து போறாரா, இல்லேன்னா, டாக்டர் தினமும் பத்து கிலோமீட்டர் நடந்து போங்கன்னு சொன்னதுக்கு நடக்குறாரான்னு தெரியலை, அவர் எதுக்கு நடக்குராரான்னு தெரியாமலே சில கூமுட்டைங்க அவர் பின்னாடி நடப்பானுங்க, ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க மாட்டாரு, முடியாதுன்னு சொன்னாரு, அப்புறம் ஸ்டாலின் என்னோட தம்பின்னு சொல்லிட்டு திரியுறாரு, என்ன கண்றாவி, இதையெல்லாம் கேட்கணும், பார்க்கனும்னு தமிழனுக்கு தலையெழுத்து, 

இந்த ஆர்டிஓ ஆபீசுல புதுசா எல்எல்ஆர் போடுறவன் எப்படி திரு, திரு ன்னு முழிப்பான், அப்படி ஒரு முழி முழிக்கிறாங்க தமிழ்நாட்டு முதலமைச்சர்கள், அதுல யாரு முதலமைச்சர்னு அவங்களுக்கே தெரியலை, நாமதான் முதலமைச்சரா இல்லேன்னா வேற யாராவாது நாடோடி  முதலமைச்சரான்னு எல்லோருக்குமே டவுட் இருக்கத்தான் செய்யுது, 

ஆனா ஒரு விஷயம் கன்பார்ம், திருப்பி காங்கிரஸ் ஆட்சிக்கு கூட தமிழ் நாட்டுல வந்திரும், ஆனா, இந்த பிஜேபி கண்டிப்பா வராதுங்கிறது கன்பார்ம் ஆகிடுச்சு, 

தமிழ்நாட்டை விட்டுட்டு அவுங்க வேற எங்கியாவது போயி கூத்து நடத்தி பிழைச்சிக்கலாம், அதுதான் அவனுங்களுக்கு நல்லது, ஸ்டாலின், துரைமுருகன் ஒரு பக்கம் காமெடின்னா, இபிஎஸ்-ஓபிஎஸ் இன்னொரு பக்கம் காமெடி, உதிரில பார்த்தா வைகோவும், பாமகவும், விசிக வும், தனி காமெடி டிராக், இவங்களை நம்பித்தான், தமிழ்நாடு, இன்னும் இந்த விவசாயிங்க இவனுங்களை தலைவர்னு நம்புரானுங்க பாருங்க, 

இதுக்கு என்னாங்க சொல்யூசன், கடைசிவரைக்கும் பொது மக்களும் வாட்சப்ப்ள மீம்ஸ் போட்டு ஸ்கோர் ஏத்திகிட்டு இருக்க வேண்டியதுதான், மக்கள் ஒண்ணா சேர்ந்து வேலை பார்த்தாதான் இவனுங்க திருந்துவானுங்க, 

இதுல நடிகர்கள் வேற பண்ற அலம்பலை பார்த்தா கன்றாவியா இருக்கு, பாதிக்கு மேல வரி கட்ட மாட்டானுங்க, சினிமாவுல பேசுற வசனம் நிஜத்துல இருக்காது, தமிழ்நாட்டு ரசிகர்கள் கூமுட்டைங்கன்னு நினைச்சு தினம், தினம் ஒரு படம் காமிக்கிரானுங்க, 

ஸ்டெர்லைட் பிரச்சினையை கொண்டு வந்தானுங்க, அப்புறமா காவிரி மேலாண்மையை தூக்கிகிட்டானுங்க, முதல்ல ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு விஷயத்தை நாம சொல்லியே ஆகணும், சும்மா, இந்த சட்டைய கிழிச்சிக்கிறது, வசனம் பேசுறது , இதையெல்லாம் நிறுத்திட்டு, 
மான, ரோசம் இருந்தா, உடனே உங்க மருமகன்கிட்டே சொல்லி சன்டீவி குழுமத்துகிட்டே சொல்லி கர்நாடகாவுல ஓடுற நம்ம ஊர் சானல்ல நிறுத்த சொல்லுங்க பார்ப்போம், அதை விட்டுட்டு அஞ்சுக்கும், பத்துக்கும் கந்து வட்டி வாங்கி கடைய போட்டா, உனக்கு உணர்வில்லையா, உயிரில்லையான்னு அப்பாவி ஜனங்களை உசுப்பேத்தி விட்டு கடைய அடைக்க சொல்ல கூடாது, காமெடி பண்ணிக்கிட்டு இருக்க கூடாது, உங்க திமுக காரங்க எத்தனை பேரு கர்நாடகாவுளே வியாபாரம் செய்வான், அவனையெல்லாம் முதல்ல அந்த ஊரை விட்டு அந்த மாநிலத்தை விட்டு வெளியே வர சொல்லு தலிவரே, அப்பால பாக்கலாம்,  

உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்குன்னா தக்காளி சட்னியா?

நம்ம மாநிலம் மாதிரியே வாட்டாள் நாகராஜன் ஒரு காமெடி பீசு, நம்ம ஊரு அப்பாவி தமிழர்களை அடிக்கிராம்ல, உண்மையிலே அவன் ஆம்பளையா இருந்தா, தில் இருந்தா, எங்க தமிழன் உங்க ஊருல ஆரம்பிச்சிருக்கிற சன் குழுமத்தோட சானல் மேல கைய வை பார்ப்போம், வாட்டாள் நாகராஜன் வீரப்பன் இருக்கிற வரைக்கும் வாய திறக்கலை, வீரப்பன் போன பிறகுதான் ஆட்டத்தை ஆரம்பிச்சிருக்கான், மண்ணுக்கு ஒரு நல்லவன் இருந்தா, அவனை இவனுங்க எல்லாவனும் சேர்ந்து மண்ணுக்குள்ளே அனுப்பிருவானுங்க, வாட்டாள் நாகராஜனுக்கு பகிரங்க சவால், எங்க ஊர்க்காரன் ஆரம்பிச்சிருக்கிற சானலை உன்னால நிறுத்த முடியுமா? உனக்கு உண்மையிலேயே அந்த தில் இருக்கா?

ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியத்துக்காக ஊர் ஊரா நடக்கிறாரு, மாட்டு வண்டி ஓட்டுறாரு, எல்லாம் சரிதாங்கோ, ஒரு கட்சித்தலைவனுமே மண்வெட்டியை தூக்கி, விவசாயம் செய்யலை, தலைவன் ஒரு விஷயம் செஞ்சா உடனே ஒட்டுமொத்த தொண்டர்களும் அதையே செய்வானுங்க பார்த்திருக்கீங்களா, தலைவன் தண்ணீர் பந்தல் திறந்தா அதையே செய்வானுங்க, தலைவன் தீக்குளிப்பென்னு சொன்ன உடனே இவனுங்க தீக்குளிச்சிருவானுங்க, ஆனா ஏதாவது ஒரு தலைவன் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சி, இன்னும் பூக்காத கட்சித் தலைவன் எவனாவது ஒருத்தன், ஒரே ஒருத்தன் விவசாயம் செய்ய போறோம், எங்க ஊரு விவசாயிக்கு ஆதரவா தண்ணி இறக்கி கொடுக்க போறோம்னு சொல்லிருக்கானா? ஒருத்தன் கூட கிடையாது, 

ஒருத்தன் டி போடுவான், ஒருத்தன் பக்கோடா விப்பான், ஒருத்தன் பிச்சை எடுப்பான், ஒருத்தன் தெரு, தெருவா வாக்கிங் போவான், ஆனா எவனுமே தமிழ்நாட்டுல இருக்கிற பிரச்சினைக்கு வாய திறக்கல, 

எங்கயோ லண்டன்ல, சிங்கப்பூர்ல, மலேசியாவுல இருக்கிற தமிழன் ஸ்டெர்லைட் க்கு எதிரா போராடுரானுங்க, இங்கே உள்ளூர்ல இருக்கிற கீதா ஜீவன் இங்கே களி கிண்டிகிட்டு இருக்கு, இன்னொரு டிக்கெட் என்னடான்னா, ஹனிமூனுக்கு போயிருக்கும் போல, எங்களுக்கும் சொந்த பந்தம் இல்லையா ன்னு ஒரு அமைச்சர் போன்ல கேக்குறான், அப்படீன்னா பதவிய ராஜினாமா செஞ்சிட்டு சொந்த பந்தத்தோட போயிட்டு வா தங்கமே! நீ இங்கே உக்காந்து ஒன்னும் சாதிக்க போறது கிடையாது, 

வேதாந்தா நிறுவனம் நம்மளை பார்த்து கேவலமா, எகத்தாளமா சிரிக்குது, பன்னாடை ஊடகங்கள் எது எதுக்கோ நாலு பேரை உக்கார வச்சு பேசுறானுங்க, ஒருத்தன் கூட வேதாந்தாவுல ஊடகங்கள் விலை போனதை நாலு கட்சிக்காரனை வச்சு, தூத்துக்குடி பொது மக்களை வச்சு பேச வேண்டியதுதானே, ஆக இந்த வேசி ஊடகங்கள் செய்யுற கூத்துக்கு பொது மக்கள் சாகத்தான் வேணும், மக்கள் நீதிமன்ற தடையை மீறினா, கடும்தண்டனை கொடுப்பானுங்க, ஆனா மத்திய அரசு நீதிமன்ற உத்திரவை மீறலாம், பாவம் மத்திய அரசு என்னதான் செய்யும், ஸ்கீம் ங்கிற வார்த்தைக்கு அர்த்தத்தை இன்னும் டிக்சனரியிலே தேடிகிட்டுத்தான் இருக்கானுங்க, கிடைக்க மாட்டேங்குதே! 

இது எல்லாத்தையும், சும்மா, சும்மா வாட்ஸ்அப் ள படிச்சு பார்த்திட்டு சிரிச்சிட்டு போறானுங்க, நம்ம ஊரு இளசுங்க, எல்லோருமே வாட்டாள் நாகராஜனுக்கு சவால் விடுங்க, தில் இருந்தா கீழே இருக்கிற, உங்க ஊருல ஓடுற ஏதாவது ஒரு சானல இழுத்து மூடு பார்ப்போம், அடிச்சு நொறுக்கு பார்ப்போம், 

பாவம் எங்க தளபதி அவங்க அப்பா ஆட்சி பண்ணப்ப கோமாவுல இருந்தாரு போல, ஆனா இப்போ அவருக்கு சுயநினைவு வந்திருச்சு, இப்போ வாங்கடா, என்  தலைவன் சிரிச்சிகிட்டே போராடுவார்டா எங்க தங்க தளபதி, இதுக்கெல்லாம் அசரமாட்டாரு, எங்க தலைவரோட சொந்தக்காரங்க பிள்ளைங்க எவ்வளவு தில்லா உங்க ஊருல இருக்காங்க, உன்னால அவங்கள தூக்க முடியலை, வாட்டாள் நாகராஜனுக்கு தில் இருந்தா, திராணி இருந்தா எங்க ஊரு திமுக காரன் கம்பெனியை, சொந்தக்காரன  தேடி கண்டுபிடிச்சு கைய வச்சு பாரு, அப்போ பாரு என்ன நடக்குதுன்னு? எனக்கு தெரிஞ்சு வாட்டாள் நாகராஜன் ஒரு கட்டப்பஞ்சாயத்து ஆளுன்னு நினைக்கிறேன், அவனும் நம்ம தமிழ்நாட்டு சன்டீவி குழுமத்துகிட்டே கையேந்தி பிச்சை எடுத்திருப்பான்னு நினைக்கிறேன், நீங்க என்ன நினைக்கிறீங்க?  உதயா க்ரூப் ஆப் சானல் மேல கைய வைக்கவே பயப்படுதானே, 


பொழுதுபோக்கு தொலைக்காட்சி
திரைப்படத் தொலைக்காட்சி
இசை தொலைக்காட்சி
செய்திகள் தொலைக்காட்சி
குழந்தைகள் தொலைக்காட்சி
சிரிப்பு தொலைக்காட்சி
அவ்வளவுதாங்க......

Tuesday, March 27, 2018

அசால்ட் அரசியல், சால்ரா ஊடகங்கள் Vs சாவின் விளிம்பில் தூத்துக்குடி மக்கள்......

 
மணமக்களை வாழ்த்திட்டு இழவு வீட்டுக்கு போங்க.......




பிரதான கட்சிகளின் Bad Play - STERLITE!
ஸ்டெர்லைட் விவகாரத்தை இன்று லாப நோக்கினில் அரசியல் நடத்தும் கேவலமான பிரதான கட்சிகள், அதற்கு ஒரு சில ஊடகங்களும் துணை போவதும் வேதனைக்குரியதாகிறது, யாரை காப்பாற்ற இந்த நாடகம்,? இன்று புதியதாய் உருவாகும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு என்ன நடக்கின்றது என்றே தெரியுமா? இன்று பொறுப்பில் இருக்கும் பல்வேறு அமைச்சர்களுக்கு நாட்டு பிரச்சினைகளின் வரலாறு தெரியுமா? மும்பையில் இருந்து விவசாயிகளால் புறந்தள்ளப்பட்ட திட்டத்தை அதிமுகவின் ஜெயலலிதா இருகரம் கூப்பி வரவேற்றார். உடனே ஆர்ப்பாட்டம் செய்து எதிர்க்க வேண்டுமே என்ற கட்டாயத்திற்காக திமுக அதனை கடுமையாக விமர்சனம் செய்தது. முடிந்து விட்டதா? இல்லை, திமுக ஆட்சியில் கலைஞர் தலைமையில் அதற்கு அனுமதி வழங்கி உத்திரவிட்டது. அப்படியெனில் இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது அது தவறு, ஆளும்கட்சியாக இருக்கும்போது அது நியாயம். மாநிலத்தில் இவர்களின் ஆட்டம் அப்படியெனில், மத்தியில் காங்கிரஸ் யும், பாஜக வும் போட்டி போட்டு கொண்டு அனுமதி வழங்கி தமிழர்களை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஒரு சில பிரபல ஊடகங்கள் இன்று அதனை ஏதோ போனால் போகிறது என்று செய்தி வெளியிட்டதையும் நினைக்கையில் தமிழர்களை எந்தளவிற்கு வஞ்சித்து இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.  இன்றும் பாருங்கள், ஸ்டாலின் தலைமையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள், நீங்களே அனுமதியும் வழங்கி விட்டு இன்று நீங்களே கண்டன தீர்மானமா? தமிழர்களை இதை விட அவமானப்படுத்த முடியாது என்று இளைஞர்களும், தூத்துக்குடி வாழ் மக்களும் கொந்தளித்து போயிருக்கிறார்கள். யாருக்காக இந்த நடிப்பு, நாடகங்கள், அய்யா கட்சி தலைவர்களே, நீங்கள் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, எங்களை இப்படி அவமானப்படுத்தாதீர்கள் என்று கொந்தளித்து போயிருக்கின்றது போராட்ட குழுவினர். மாட்டிற்கு கொடுத்த மரியாதையை கூட மனிதர்களுக்கு கொடுக்காத ஒரு சில ஊடகங்கள்! மக்களின் அன்றாட வாழ்வினை , வாழ்க்கை போராட்டத்தினை "விளம்பர இடைவேளைக்கு பிறகு" என்று கல்லா கட்டும் கயவர்கள்! இவர்களை போன்றவர்களால் உண்மையாக களத்தில் உணர்வுப்பூர்வமாக நிற்பது யார் என்றே மக்களுக்கு தெரியாமல் குழப்பி விடுகின்றார்கள்! 

இதுவும் ஒரு கேடு கெட்ட அரசியல் தந்திரமே! இன்று படையெடுக்கும் ஒவ்வொரு குட்டி குட்டி கட்சிகளும் அவர்களின் கட்சி வளர்ப்பிற்கு தகுந்த தலையங்கத்தை தேடி கொண்டிருக்கிறார்கள், பிணங்களின் மீது அரசியல் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் நிஜமாகவே மக்களின் உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் கட்சி கொடிகளை பறக்கவிட்டு அவர்களின் கேள்விகளை கேலிக்கூத்தாக்கும் வேலைகளை செய்யாதிருக்க வேண்டும், மக்கள் ஒற்றுமை இல்லாததும் இதற்கு காரணம் என்றும் கூட சொல்லலாம், காரணம், ஒரு பக்கம், மக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று போராடிக்கொண்டிருக்கும் போதே மறுபக்கம் சதிகார அரசியல் பேடிகளால் எங்களுக்கு தீர்வு கிடைத்து விட்டது, நாங்கள் வாபஸ் பெற்றுக்கொள்கிறோம், நன்றி என்று ஒரு குழுவினர் சொல்வதை பணவெறி பிடித்த ஒரு சில ஊடகங்களை கொண்டு  போராட்டத்தை முறியடிக்க நினைக்கும் கேவலங்கள்தான் அரங்கேறி வருகின்றது. இந்த நிலை மாற வேண்டும், ஸ்டெர்லைட் ஆலை பற்றிய விபரம் எத்தனை பேருக்கு தெரியும், இன்றைய இளைய தலைமுறைக்கு இதன் வரலாறு தெரியுமா? இதோ அந்த வரலாறு...

தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளாக நிலத்தையும், நீரையும், காற்றையும் மாசுபடுத்திக் கொண்டு ஆயிரக்கணக்கான மக்களின் உடல் நலத்தை பாதித்துக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின் குற்றங்களுக்கெல்லாம் கண்துடைப்பு தண்டனையாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே ரூ 100 கோடி அபராதம் கட்டும்படி உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

2010-ல் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடும்படி பிறப்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் கே பட்னாயக், எச் எல் கோகலே அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு மேற்கண்டபடி தீர்ப்பளித்தது.

உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை வாங்குவதற்காக ஸ்டெர்லைட் பொய்யான தகவல்களை தந்ததும், தகவல்களை மறைத்ததும் உண்மைதான். ஆனாலும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கா விட்டால் அது தொழிற்சாலையை மூடுவதில் முடிந்திருக்கும்என்று குறிப்பிட்டு ஸ்டெர்லைட்டின் அந்த குற்றத்தை மன்னித்திருக்கிறார்கள் நீதிபதிகள்.


‘1997 முதல் 2012 வரை ஸ்டெர்லைட் இழைத்த சேதங்களுக்கு நிவாரணமாகவும், உரிய அனுமதிகள் பெறாமல் தொழிற்சாலையை நீண்ட காலம் நடத்தியதற்கு அபராதமாகவும் ரூ 100 கோடி கட்ட வேண்டும். 2010-11ல் கம்பெனியின் லாபமான ரூ 1,043 கோடி முந்தைய நிதி ஆண்டில் கிடைத்த ரூ 744 கோடியை விட 40 சதவீதம் அதிகம். அதனால் ரூ 100 கோடி ரூபாய் அபராதம் என்ற கடும் தண்டனையை விதிக்க வேண்டியிருக்கிறதுஎன்று சவடாலாக உறுமியிருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.

ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கும் வேலை வாய்ப்புகள், அரசுக்கு செலுத்தும் வரித் தொகைகள், அது உற்பத்தி செய்து நாட்டுக்கு அளிக்கும் தாமிரத்தின் முக்கியத்துவம் இவற்றைக் கருத்தில் கொண்டு அபராதத்தைக் கட்டி விட்டு அது தனது நடவடிக்கைகளை தொடர அனுமதிக்கிறோம்என்றுபாலியல் வல்லுறவு செய்த மைனர் அபராதம் செலுத்தி விட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம்என்ற  ஆலமரத்து சொம்பு நாட்டாமையைப் போல தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
ஸ்டெர்லைட்2011-12ம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனையின் மூலம் ரூ 19,051 கோடி ஈட்டியிருக்கிறது. அதில் ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்ட தொகையின் மதிப்பு வெறும் ரூ 92 கோடி மட்டுமே. ஸ்டெர்லைட்டின் மொத்த விற்பனை வருமானத்தில் 0.48% பெற்றுத் தரும் வேலை வாய்ப்புகளுக்காக லட்சக்கணக்கான மக்களின் உடல் நலத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்துக் கொள்ளலாம் என்கிறது உச்ச நீதிமன்றம்.

சென்ற நிதியாண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் அரசுக்கு செலுத்திய ரூ 960 கோடி கலால் வரியையும், சுமார் ரூ 550 கோடி வருமான வரியையும் முழுவதுமாக செலவிட்டால் கூட நிலங்களுக்கும், கடல் வளங்களுக்கும், மக்களின் உடல் நலத்துக்கும் இந்த ஆலை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் செய்வது சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம்.

சமூகத்துக்கு மாபெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி ஸ்டெர்லைட் நிறுவனம் சென்ற ஆண்டு ஈட்டிய நிகர லாபம் ரூ 1,657 கோடி (விற்பனை மதிப்பில் 8.6%). இந்த லாபத்தில் 56.64% (ரூ 939 கோடி) டுவின் ஸ்டார் என்ற லண்டனைச் சேர்ந்த வேதாந்தா குழும நிறுவனத்துக்கும், 12.45% (ரூ 206 கோடி) சிட்டிபேங்க் நியூயார்க்குக்கும் போகிறது. ஒரு ஆண்டில் ரூ 939 கோடி ரூபாய் லாபம் பெறும் வேதாந்தா, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் செய்த பங்கு முதலீடு வெறும் 336 கோடி மட்டும். அதாவது 16 ஆண்டுகளில் தனது முதலீட்டுப் பணத்தை பல மடங்கு திருப்பி எடுத்த பிறகு சென்ற ஆண்டு முதலீட்டின் மீது சுமார் 300% லாபம் ஈட்டியிருக்கிறது.

மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டின் தொழில் வளாகம் அமைக்கும் முயற்சி விவசாயிகளின் கடும் எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து 1.5.1994-ல் தடை செய்யப்பட்டதுஅப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஸ்டெர்லைட்டை இரு கரம் நீட்டி வரவேற்று 30.10.1994 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆரம்பம் முதலே, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களும், உழைக்கும் மக்களும், சில கட்சிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 1.8.1994 அன்று வழங்கிய அனுமதி கடிதத்தில்சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்தான் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும், தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் அமைக்கப்பட வேண்டும்என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஆனால் மக்களின் எதிர்ப்புகளை மீறி 1997-ம் ஆண்டு இயங்க ஆரம்பித்த ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைக்கப்பட்டிருந்தது; ஆலையைச் சுற்றி பசுமை வளையமும் ஏற்படுத்தப்படவில்லை.

21.9.2004 முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு ஸ்டெர்லைட்டின் இயக்கத்தை ஆய்வு செய்து விதிமுறை மீறல்களை பட்டியலிட்டது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.
28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை  நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது. “ஸ்டெர்லைட் ஆலை வந்தீவு கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் கசுவார் கிராமத்திலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், கரைச்சல்லி, விளங்குசல்லி கிராமங்களிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்த நான்கு கிராமங்களும் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள 21 தீவுகளில் அடங்குபவை. இதனால் 1995-ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அனுமதி கடிதத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் மீறியிருக்கிறது தெளிவாகிறது.”

இந்த நான்கு தீவுகளையும் சேர்த்து 21 தீவுகளை கொண்டுள்ள மன்னார் வளைகுடா வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 35(1)ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் பிரிவு 35(4)ன் கீழ் மன்னார் வளைகுடாவை ஒரு கடல்சார் தேசிய பூங்காவாகவும் அறிவிக்கலாம்என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

மன்னார் வளைகுடா சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்தப் பகுதியில் உயிர்வாழ் ஆதாரங்களை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது. மத்திய அரசு அத்தகைய உத்தரவை பிறப்பித்ததும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை சிப்காட் தொழில் வளாகத்திலிருந்து இடம் மாற்ற ஏற்பாடுகள் செய்ய வேண்டும்என்று தீர்ப்பளித்திருந்தது உயர்நீதி மன்றம்.

உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஸ்டெர்லைட் கொடுத்த பொய்யான தகவல்களையும், உண்மை நிலவரங்களை திரித்து கூறியதையும் அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் ஆணைக்கு உடனடியாக இடைக்காலத் தடை விதித்து ஆலை தொடர்ந்து இயங்க வழி வகுத்தது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இழுத்தடித்த வாதங்களுக்குப் பிறகு 2013 ஏப்ரல் முதல் வாரத்தில் வழங்கிய இறுதித் தீர்ப்பில் ஆலையை மூடும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.

இந்தியாவின் தாமிர தேவைக்காக ஸ்டெர்லைட் தொண்டு செய்கிறது என்பது ஆதாரமற்ற வாதம். 1992-ல் இந்திய தாமிர உற்பத்தித் துறை தனியார் முதலீட்டுக்கு திறந்து விடப்பட்டது. 1996-ல் 62,000 டன்னாக இருந்த தாமிர உற்பத்தி 2007-ல் 9.97 லட்சம் டன்னாக உயர்ந்தது. இப்போது இந்தியாவின் தாமிர தேவை ஆண்டுக்கு 4 லட்சம் டன் மட்டுமே. ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் டன் தாமிரமும் தாமிரப் பொருட்களும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதனால், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு அது உற்பத்தி செய்யும் சுமார் 4 லட்சம் டன் தாமிரம் நின்று போனாலும் நாட்டுக்குத் தேவையான தாமிரத்தின் அளவு எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை.

தாமிர உற்பத்திக்கான தொழிற்சாலைகள் ஏன் இந்தியாவில் இடம் பெயர்ந்தன?   வெளிநாடுகளிலிருந்து மூலப் பொருளை இறக்குமதி செய்து, உற்பத்தி பொருளில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கே ஏற்றுமதியாகும் தொழில் இங்கு இயங்க வேண்டிய அவசியம் என்ன? 2011-12ல் செய்த ரூ 19,051 கோடி மதிப்பிலான தாமிரப் பொருட்களின்  விற்பனைக்கு ரூ 16,094 கோடி மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட தாமிர அடர் கரைசலை மூலப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட்.

சுற்றுச் சூழலையும் மக்கள் உடல்நலனையும் பாதிக்கும் தொழிற்சாலைகளை வளரும் நாடுகளுக்கு இடம் மாற்றி அவற்றின் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதுதான் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான் போன்ற சுற்றுச் சூழல் பாதுகாப்பு தந்திரமாக இருக்கிறது. பல பத்தாண்டுகள் முன்னேற்றம் காணாத, பாதுகாப்பற்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடத்தப்படும் உற்பத்தியில் வெளியாகும் கழிவுப் பொருட்களை சுத்திகரிக்க செலவழிக்காமல் வெளி விடுவதன் மூலம் ஏற்றுமதி பொருளின் விலை குறைவாக பராமரிக்கப்படுகிறது.

தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. காற்றில் கலக்கும் துகள்கள் காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் கழிவுநீரில் உள்ள காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் நீரை நேரடியாக நச்சுப்படுத்துகின்றன. ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. திடக்கழிவுகள் கொட்டப்படும் நிலங்கள் மீட்க முடியாதபடி பாழாகின்றன.

மாசு உருவாவதையும், வெளியாவதையும் தடுப்பதற்கான ஆராய்ச்சிகளுக்கோ, உருவான மாசை தூய்மைப் படுத்துவதற்கோ பணம் செலவழிக்காமல் மலிவு விலையில் பொருட்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் முதலாளிகளும், வாங்கி பயன்படுத்தும் பன்னாட்டு முதலாளிகளும் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர். சுற்றுச் சூழல் மாசுபடுவதை கண்காணிக்க வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து வளி, நீர், நில மாசுகளை தொடர்ந்து வெளியேற்றி தமது சுரண்டலையும் கொள்ளை லாபம் ஈட்டலையும் தொடர்கிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி ஏற்பட்ட கந்தக டை ஆக்ஸைடு கசிவினால் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். அதனால் தீவிரமடைந்த எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூடல் உத்தரவை ரத்து செய்யக் கோரும் ஸ்டெர்லைட்டின் மேல் முறையீட்டை பசுமை வாரியம் விசாரித்து வருகிறது.

திருப்பூரில் சாயப் பட்டறைகள் அழித்தொழித்த நொய்யல் ஆற்றையும் அவற்றால் பாழாக்கப்பட்ட சார்ந்த விளைநிலங்களையும் வேலூர் மாவட்டத்தில் தோல் பட்டறைகளால் பாழடிக்கப்பட்ட விளைநிலங்களையும் நீர் ஆதாரங்களையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி புள்ளி விபரங்கள் காட்டுவதில்லை.

உலகளாவிய உற்பத்திச் சங்கிலிகளை இணைத்து இயக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களுக்கு குறைந்த செலவிலும் மக்களுக்கு அதிக பாதிப்பிலும் மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தி செய்த பொருட்களை ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உயர் விலைக்கு விற்று லாபம் ஈட்டி கொழுக்கின்றனர். நிலத்தையும், நீரையும், காற்றையும் அதன் மூலம் மக்களின் உடல் நலத்தையும் வாழ்வாதாரங்களையும் அழித்து விட்டு பாயைச் சுருட்டிக் கொண்டு அவர்கள் இன்னொரு நாட்டுக்குத் தமது கொள்ளையைத் தொடர நகர்ந்த பிறகு பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த அழிவுகளின் விளைவுகளை மக்கள் சுமக்கின்றனர்.

மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச் சூழல் அமைச்சகம், உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், .தி.மு..வின் வழக்குகள் போன்ற நீதித்துறை நடவடிக்கைகளை அத்தகைய தொழில் செய்யும் முறையின் சைட் ஷோக்களாகவே கருதி தமது சுரண்டலை தொடர்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.
இதில் ஸ்டெர்லைட்டை கொண்டு வந்த ஜெயலலிதா தற்போதைய இடைக்காலத் தடை மூலம் போற்றப்படுகிறார். போராடும் மக்களை திசைதிருப்பும் இந்த ஏமாற்று நடவடிக்கையை பலரும் ஆதரிக்கின்றனர். புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் நடந்து வரும் மறுகாலனியாக்க நடவடிக்கைகள் மக்களை மட்டுமல்ல, நாட்டின் இயற்கை வளத்தையும் அழிக்கின்றன என்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை ஒரு துலக்கமான சான்று.

மக்களையும், இயற்கை வளத்தையும் நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலை!
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது.
அமெரிக்காவில், 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டனுக்கு அருகில் அமைக்கப்பட்ட அசார்கோ (Asarco) எனும் தாமிர ஆலை, மக்கள் எதிர்ப்பால், 1984 இல் மூடப்பட்டது. கொள்ளை இலாபம் இந்த ஆலையில் கிடைக்கிறது என்பதால், அமெரிக்காவிலும், சிலியிலும் பயனற்றது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங்களையும், 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில்நுட்பத்தையும் கொண்டு, தமிழ்நாட்டில் இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.

தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த .குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது

மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை. அதனால் தங்களது உயிர் காக்க, தலைமுறைகள் தழைக்க, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம் கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு 2011 ஆம் ஆண்டில் $2.01 மில்லியனும் (சுமார் ரூ 11 கோடி), கடந்த (2010 -2012) மூன்று ஆண்டுகளில் மொத்தம் $5.69 மில்லியனும் (சுமார் ரூ 28 கோடி) நன்கொடையாக கொடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்த 2009-10-ம் ஆண்டில் வேதாந்தாவிடமிருந்து $3.66 மில்லியன் பணத்தை பெற்றிருக்கின்றன இந்திய அரசியல் கட்சிகள்.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கும் வேதாந்தா தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வந்திருக்கிறது. இந்துத்துவா குழுக்களால் நடத்தப்படும் லண்டனில் இருக்கும் கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளிக்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநராக கடந்த 2004 ஆம் ஆண்டு வரை .சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அதனால் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏதுமின்றி தொடர்ந்து தப்பித்து வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை.
எனினும் மக்கள் மன்றத்தில் தீர்ப்புகள் எழுதப்படும் போது பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.