பங்காளிங்க..

Sunday, June 29, 2014

திமுக வளர்கின்றதா? தேய்கின்றதா? நடுவர் மஞ்சப்பை

திமுக நடத்தும் மீட்டிங் என்றாலே வரிந்து கட்டி கொண்டு தலைவரின் பேச்சை கேட்க முதல் வரிசையில் நின்ற காலம் அது....எதுகை மோனை என்ன, எடுத்துக்காட்டுகள் என்ன, என்ன? எங்கே போனது அந்த உதாரணங்கள்....எனக்கு நினைவு தெரிந்து நான் பள்ளிக் கூடம் படிக்கும் போது, கல்லூரி படிக்கும் போதும் கனிமொழி யாரென்றே எனக்குத் தெரியாது...ஆனால் தற்போது வாரிசுகளின் ஆட்டம் அதிகம்,

அதனால் தற்போது அவரது பேச்சினை கேட்க யாருமே முன் வராதது ஆச்சரியமான விஷயம்...

காரணம் என்ன?   

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் முடித்து விட்டு வீடு திரும்பிய கலைஞரும், ஸ்டாலினும் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி என்ன? 

மக்கள் மிகுந்த எழுச்சியோடு இருக்கின்றார்கள்....இந்த அம்மாவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காது....இந்த அம்மாவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகின்றார்கள்....ஆனால் முடிவுகள் எக்குத்தப்பாய் முடிந்தது. இப்போது களை  எடுக்க தொடங்கி இருக்கின்றார்கள்....

ஆடத் தெரியாதவள்  தெரு கோணல் என்று சொன்னாளாம்...அந்த கதையில் தான் இருக்கின்றது..திமுக தலைவரின் இந்த பேட்டிகள்.....

பல வருடங்களாய் திமுக விற்கு உழைத்த தொண்டனுக்கு கடைசி வரை குவாட்டர் பாட்டிலும், பிரியாணி பொட்டலமும் மட்டுமே...கட்சி என்றால் என்ன,? என்று தெரியாத, கட்சி வரலாறு தெரியாத மக்கள் இன்று நாடாளுமன்ற வேட்பாளர்கள்.....கட்சி தேர்தல் நிதி வழங்கி விட்டால் அவர்களுக்கு தேர்தலில் சீட், மற்றவர்களுக்கு குல்லா என்றால் யாரால்தான் ஜீரணிக்க முடியும்....

என்ன காரணம் என்று கட்சி மேலிடதிர்க்கே வெளிச்சம்...

அதிமுக ஒரு பெண்ணின் தலைமையில் நடக்கின்றது.....ஆனால் இன்று வரை கட்சி கோட்பாட்டிற்கு உட்பட்டு, கட்சியை ஒரு தலைமையின் கீழ் நடத்துவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல...என்பதை கலைஞர் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்....அவரிடமும் சில குறைகள் இருக்கலாம்...ஆனால் ஒரு பெண் அகில இந்திய கட்சியின் தலைமையில் இருப்பதை, கட்டுகோப்பாய் கட்சியை வழிநடத்துவது அவ்வளவு எளிதல்ல.....அந்த தைரியம் பாராட்டப் படக்கூடியதே....

திமுக வை அழிக்க வெளியில் இருந்து யாரும் வர முடியாது....உண்மைதான்...வெளியில் இருந்து யாரும் வர முடியாது..உள்ளேயே இருக்கின்றார்கள்....

அடிக்கடி அண்ணாதுரையின் வசனங்களை நினைவுபடுத்தும் கலைஞருக்கு நாங்கள் ஒன்றை நினைவுபடுத்துகின்றோம்...கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை மட்டும் அண்ணா சொல்லவில்லை....குடும்ப உறுப்பினர்களுக்கு, வாரிசுகளுக்கு அரசியலில் இடமில்லை என்றும் அதே அண்ணா தான் சொன்னார்....

அது போலவே தனது தொண்டர்களை ஊக்குவித்து தான் கலைஞர் கருணாநிதி என்ற தொண்டனை தேர்ந்தெடுத்தார்....அவரது சொந்தக்கார மகனையோ, அல்லது உறவினரையோ கட்சிக்குள் சேர்க்க வில்லை...

திமுக அழிந்து விடாதா, பூண்டோடு உருத்தெரியாமல் போய் விடாதா என்று ஒரு சிலர் நினைக்கின்றார்கள் என்று சொல்லி இருக்கின்றார்.
மன்னிக்க வேண்டும் தலைவரே, நாங்கள் அதை பற்றி நினைப்பதற்கு எங்களுக்கு நேரமில்லை. நீங்களாகவே அப்படி சொல்லிக் கொண்டு மனதை தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.....

ஒரு கண்ணில் வெண்ணை, மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்ற கணக்கினில்  தான் திமுக தலைமை நடந்து கொள்கின்றது என்று தலைவரின் மூத்த மகனே பேட்டி அளிக்கின்றார்.....ஸ்டாலினால் தான் திமுக தோல்வி அடைந்தது என்று அழகிரி பேட்டி கொடுக்க....உடனே அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படுகின்றது. ஏன் அழகிரி பக்கம் இருக்கும் நியாயம் விளக்கம் கேட்கப் படவில்லை என்பதே அழகிரி ஆதரவாளர்களின் கேள்வி...உண்மைதானே, அப்படி என்றால் சாவி கொடுத்த பொம்மையாகி விட்டாரோ கலைஞர் என்ற சந்தேகம் வரத்தானே செய்யும்....

அனைவரையும் களை எடுக்கின்றோம் என்ற பெயரில் தனக்கு வேண்டாதவர்களை எல்லாம் தற்போது நீக்கி கொண்டு வருகின்றார்கள்....

குடும்ப அரசியலில் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டிருக்கின்றது....அதை ஏற்றுக் கொண்டால், கவனித்துக் கொண்டால் திமுகவின் வளர்ச்சி அபாரமாய் இருக்கும்...இல்லை எனில் வாரிசு சண்டையும் ஓயாது...திமுக வின் வளர்ச்சியும் தேயத் தொடங்கி விடும்....இதை நாங்கள் சொல்லவில்லை...அரசியல் வல்லுனர்கள் சொல்லிக் கொள்கின்றார்கள்....

Friday, June 13, 2014

யாருக்கெல்லாம் நெஞ்சு எரியுது?

 நெஞ்சு எரியுதுன்னு அடிக்கடி சொல்பவரா நீங்கள்? 

அப்படீனா உங்களுக்குத்தான் இந்த கட்டுரை....

ஒரு சம்பவத்தை பார்த்து நெஞ்சு பதைபதைத் தால் அது வேறு, அது உணர்ச்சிப்பூர்வமான விஷயம்...

சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினால் அதனை கண்டு தவிப்பது, பதறுவது என்பது உணர்வுப்பூர்வமான விஷயம்...
நமது மீனவர்களை அடித்து நொறுக்கி சிறையில் தள்ளினால் அது ஒரு விதமான நெஞ்சை உருக்கும் செய்தி...

ஆனால் நெஞ்சு எரியுது என்று சொன்னால் அது உடல் ரீதியான கோளாறு....

அது என்ன அது?  இந்த நெஞ்சு எரிச்சல் என்பது மாரடைப்பு அல்ல...அது நெஞ்சுக்கும் கீழே இருக்கும் உருவாகும் பிரச்சினை...

இந்த நெஞ்சு எரிச்சல் என்பது சில மணித்துளிகள் அல்லது சில மணி நேரமே இருக்கும்...அதாவது எப்போதாவது அதிக அளவு உணவு சாப்பிட்டு விட்டாலோ அல்லது சாப்பிட்ட மறு நொடியே படுத்தாலோ இந்த நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு விடும்....அப்படியே குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்....

நெஞ்சு எரிச்சல் எப்படி ஏற்படுகின்றது??

நாம் சாப்பிடும் உணவு என்பது நமது வாயின் வழியாக ஒரு பைப் பின் மூலமாக வயிற்றுக்கு செல்லும்....

அந்த பைப் ஒரு கதவு போல ஒவ்வொரு உருண்டையும் உள்ளே செல்லும் போது திறந்து திறந்து மூடும்....சில சமயங்களில் மூடாமல் இருக்கும் போது வயிற்றினில் இருந்து ஒரு அமிலம் உருவாகி அந்த நீண்ட குழாயினுள் சென்று விடும்...அந்த குழாயின் பெயர் ஆங்கிலத்தில் ஈசோபெகஸ் என்று அழைப்பார்கள்...

அந்த அமிலம்தான் நெஞ்சு எரிச்சலை உருவாக்கி விடும்....அதுதான் அந்தக் காலத்தில் சாப்பிடும் போது  பேசக் கூடாது என்று சொல்லி வைத்தார்கள்...

ஏனெனில் கொஞ்சம் இடைவெளி இருந்தாலும் அந்த அமிலமானது ஈசோபேகஸ் என்னும் குழாய்க்குள் சென்று விடும் மேலும் நெஞ்சு எரிச்சல் வந்து விடும் என்றே சொல்லி வைத்தார்கள்...

என்ன காரணத்தினால் நெஞ்சு எரிச்சல் உருவாகின்றது? 

மிக முக்கிய காரணம் இரவினில் அல்லது பகலினில் சாப்பிட்டதும் படுத்து விடுவது...

இரண்டாவது அதிக கொழுப்புடைய உணவினை உட்கொள்வது...

மூன்றாவது சிகரட் குடிப்பது 

நான்காவது காபி போன்ற அதிக கேபைன் உட்கொள்வது...

ஐந்தாவது கார்போனட் பானங்களை குடிப்பது 

ஆறாவது இரவினில் தக்காளி, சிட்ரிக் வகை சாறுகளை குடிப்பது 

ஏழாவது வெங்காயம் மற்றும் இரவினில் பிஸ்ஸா மற்றும் வெண்ணை சம்பந்தப் பட்ட உணவுகளை உட்கொள்வது

எட்டாவது அதிக எடை கொண்ட உடலும் இதற்க்கு காரணமாக அமைகின்றது....


நெஞ்சு எரிச்சலை எவ்வாறு தடுக்கலாம்?

முதலில் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு உட்கொள்ளல் வேண்டும்..

சிகரட் குடிப்பவராக இருந்தால் உடனடியா நிறுத்தியாக வேண்டும்...

அதிக பருமனாக இருந்தால் உடலை உடனடியாக குறைத்தல் வேண்டும்..

இரவு நேரத்தில் அதிக அளவு சாப்பிடக் கூடாது...

மிக இறுக்கமான உடைகள், மிக இறுக்கமான பெல்ட் டுகளை தவிர்த்தல் நல்லது....

இப்படி செய்தால் நெஞ்சு எரிச்சலை எளிதாக தடுக்கலாம், அல்லது குறைக்கலாம்....


நெஞ்சு எரிச்சல் வேறு, நெஞ்சு அடைப்பு வேறு புரிந்து கொள்ளுங்கள்....
நன்றி....

Thursday, June 5, 2014

யார் காதுல பூ சுத்துறீங்க???


தேர்தல் வந்தாலும் வந்தது, சும்மா அள்ளி தெளிச்சிருக்காங்க வாக்குறுதியை....எப்படி நிறைவேத்துறாங்க ன்னு பாக்கத்தானே போறோம்...

அடுத்த எலெக்சன்ல நாங்க எதையுமே கேக்க மாட்டோம்...

காது இருந்தாத்தானே கதை விடுவீங்க....காதையே கண்டம் பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க?

எப்படி கண்டம் பண்றது?  பார்த்து தெரிஞ்சிக்கோங்க....











 






என்னா ஒரு அலங்காரம்? எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ப்பா ?