பங்காளிங்க..

Monday, April 7, 2014

சிரிப்பு நடிகரின் பெர்பாமன்ஸ்!!!









வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச்  செல்லும்

போது உங்களுக்கு எப்படி இருக்கும்? 

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன்
சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள்
போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல்மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல
ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ
இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப்
பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாகஇருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும்
படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, 

வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும்
வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன
தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான்வாழும். ஆடுமாடுகள் மேயும். 


குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.
மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர்விடுவதில்லை. அடுத்த கட்டடம்
கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக்கொண்டேயிருக்கும்.!!!

ஒரு வானொலி பேட்டியில் மனம் திறந்த அமரர் நாகேஷ் அவர்களின் யதார்த்தம்......

4 comments:

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...