பங்காளிங்க..

Friday, May 9, 2014

பதிவர்களே, "அரசியல்வாதிகள் தினம்" எப்போது??

சென்னையில் நடந்த குண்டு வெடிப்பு மிக சாதாரணமான ஒன்றல்ல...வெட்கக் கேடான விஷயம் "சுவாதி தினம்" என்று பெயர் வைத்துக் கொண்டார்கள்....

பல அதிகாரிகளின் மெத்தனமும் இதில் இருக்கின்றது...ஒரு சம்பவம் நடந்த பிறகு கேமராவை போட்டு வந்தவன் இவன்தான் என்று அடையாளம் காட்டுவது எப்படி? வரும்போதே அவனை கையும் களவுமாக பிடிப்பது எப்படி? 

இது தவிர சில இடைத்தரகர்களின்  அதிக பண ஆசையும் இதற்க்கு முக்கிய காரணமாக அமைகின்றது. பணம் கொடுப்பது யாராக இருந்தாலும் போலியான முகவரியை அவர்களே எடுத்துக் கொடுத்து தட்கல் முறையிலோ அல்லது தவறான முகவரியை தவறான நபர்களுக்கு எடுத்துக் கொடுத்து பயணம் செய்ய பணிக்கின்றார்கள்...

இப்போது விசாரணையில் சந்தேகத்துக்குரிய நபர்களின் விலாசம் மற்றும் தொலைபேசி எண் தவறு என்று தெரியவந்துள்ளது...அந்த இருக்கையில் பயணம் செய்தவர்கள் யார்? விசாரணை நடைபெற்று வருகின்றது....

ரயில்வே துறை என்பது மிகப் பெரிய நெட்வொர்க் ஆகும்...இதில் பயணிகள் போர்வையில் வரும் குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொள்வது என்பது மிகச் சிரமமான விசயமே...இந்த மாதிரியான சமயங்களில் அப்பாவி பொது மக்கள் விசாரணைக்கு உட்படுத்தப் படுவார்கள்....

இவற்றை தடுக்க அப்பாவி பொது மக்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கின்றது...

செல் போன் இல்லாத மக்களே கிடையாது....இந்த செல் போன் தவறும் பட்சத்தில் நாம் உடனடியாக தாமதிக்காமல் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்...செல் போன் 500 ரூவாய் தான் போனால் போகின்றது என்று அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்...

அந்த 500 ரூவாய் செல்போன் தீவிரவாதி அல்லது குற்றவாளிகள் கைகளில் கிடைக்கும் போது உடனடியாக யாருக்காவது அல்லது பொது இடங்களுக்கு அழைப்பு விடுத்து குண்டு மிரட்டல் விடுக்கின்றார்கள்....விளைவு...தொலைபேசியை தொடர்பு கொண்டால் செல்போன் நிறுவனத்தில் தகவல் கேட்டு செல்போனின் உண்மையான உரிமையாளர் விசாரணைக்கு அழைத்து செல்லப் படுகின்றார்...அதுபோலவே சிம்கார்டு தொலைந்தாலோ அல்லது வேண்டாம் என்றாலோ உடனடியாக சிம்கார்டு நிறுவனத்திற்கு தகவல் கொடுப்பது மிக நல்லது...முடிந்தால் எழுத்துப் பூர்வமான புகார் நகலை கையில் வைத்துக் கொள்ளல் மிகப் பாதுகாப்பாய் அமையும்.....

அது போன்று லேப்டாப் வைத்திருக்கும் நபர்கள் அது தொலைந்து போகும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப் பட்ட காவல்துறையில் புகார் அளிப்பது மிக முக்கியமான ஒன்று...நீங்கள் கவனக்குறைவாகவோ அல்லது சோம்பேறித்தனமாக இருப்பது குற்றவாளிக்கு சாதகமாக முடியும்....

தீவிரவாதிகள்,  தவறு செய்ய உறுதுணையாக இருப்பது இந்த மாதிரியான விசயங்களில் பொதுமக்களே காரணமாக அமைகின்றார்கள் என்பது வேதனைக்குரிய விசயமாகும்...எப்போதுமே உங்கள் செல்போனின் ஐஎம்இஐ நம்பர் உங்கள் கைகளில் இருந்தால் மிக நல்லது, 

எதுவுமே விளையாட்டல்ல, மிக கவனத்தில் இருக்க வேண்டிய விஷயம் இது...உங்களின் கவனக்குறைவு தீவிரவாதிகளின் வசதியாகிப் போய் விடும் என்பதை மறவாதீர்கள்...

மக்களே உங்களை நீங்கள்தான் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்...அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்...அவர்களுக்கு எதிர்கட்சியை குறை சொல்லவும், அதிகாரிகளை குறை சொல்லவுமே நேரம் சரியாக இருக்கும்....மக்களின் பாதுகாப்பிற்கு எந்த அரசியல்வாதியும் இருக்க வில்லை...

சம்பவம் நடந்த பிறகு எதிர்கட்சியை விமர்சிக்கவே நேரம் சரியாக இருக்கும்..மிஞ்சி போனால் செத்து போனவனின் பிணம் அருகே நின்று போட்டோகிராபர்களை பார்த்து வசனம் பேசிவிட்டு செல்வார்கள்...செத்தவர்கள், செத்தவர்களே....பிணத்தின் மீதுதான் வசனம் பேசும் வேற்று அரசியல்வாதிகள் இவர்கள்...

சுவாதி, நிர்பயா தினம் கொண்டாடுறதுக்கா உங்களை ஆட்சியிலே உட்கார வைச்சோம்....


அது என்னமோ தெரியலை, தீவிரவாதிகளுக்கு எப்பவுமே அப்பாவி பொது மக்களைத் தான் கொல்லத் தெரிந்திருக்கின்றது...சுவாதி என்ற பெண்ணை கொன்றதால் தீவிரவாதம் சாதித்தது என்ன? ஒன்றுமே கிடையாது....

அதிகாரிகளை குறை சொல்லி ஒன்றும் பிரயோசனம் கிடையாது..அவர்களை கேட்டால் மேலதிகாரிகள் எனக்கு அந்த அதிகாரம் கொடுக்க வில்லை என்று சொல்வார்கள்...மேலதிகாரிகளை கேட்டால் அரசாங்கம் எனக்கு அந்த அதிகாரம் தரவில்லை என்பார்கள்....இப்படியே போய்க் கொண்டிருக்கும்...அதனால் பொது மக்கள் கூடுமானவரை தங்களை தாங்களே பாதுகாத்துக் கொண்டால் மிக நல்லது....

பதிவர்களே! உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு செல்போன் காணமல் போனால் காவல்துறையில் புகார் அளிப்பதை உடனே தெரிவியுங்கள் அல்லது ஊக்கப்படுத்துங்கள்....இல்லையேல் பிரச்சினை அன்று விசாரணை, அவமானம் போன்றவை ஏற்படும்....  

சுவாதி தினம், நிர்பயா தினமெல்லாம் போதும்...
பதிவர் நண்பர்களே, "அரசியல்வாதிகள் தினம்" எப்போது? 

2 comments:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...