பங்காளிங்க..

Thursday, October 5, 2017

அப்போல்லோவில்தான் அம்மா இருந்தாரா................??????

ஒரு மாபெரும் இயக்கத்தை வழிநடத்தி சென்றவர், இந்தியாவையே ஆளப்போகும் பதவிக்கும் தன்னை தயார்படுத்தியவர் இன்று தன்னுடைய மரணத்தை உலகிற்கே கேள்விக்குறியாக்கி விட்டு சென்றிருக்கின்றார், 

அம்மா இட்லி சாப்பிட்டார்கள், ஆப்பிள் பழம் சாப்பிட்டார்கள், இன்று நன்றாக பேசினார்கள், சிரித்தார்கள், என்று எத்தனை எத்தனையோ விபரங்கள் ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்யப்பட்டது, மாநிலத்தின் ஆளுநர் முதல் எதிர்க்கட்சி தலைவர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், இந்திய பிரதமர் என்று யாருமே பார்க்க முடியாத சூழல், ஒரு 50 அடி இடைவெளியில் சிறிய துவாரம் வழியாக கூட காண்பித்திருக்கலாமே! என்ன நடந்தது? 

அன்று சசிகலா சொன்னதைத்தான் நாங்கள் சொன்னோம், நாங்கள் யாருமே பார்க்கவில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் மன்னிப்பு கூறியிருக்கிறார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கு ஆதரவு குரல் கொடுத்ததாக செய்தி வந்தது, தொண்டர்கள் அம்மா மீண்டும் வந்து விட்டார்கள், வந்து விடுவார்கள் என்று மகிழ்ச்சியோடு தேர்தல் பணியாற்றினார்கள், 

ஆனால் கடைசி வரை வரவே இல்லை, என்ன நடந்தது? உண்மையிலே அப்போல்லோ மருத்துவமனையில்தான் இருந்தார்களா? அப்படியெனில் நடந்தது என்ன? 
போயஸ் இல்லத்தில் இருந்து அப்போல்லோ மருத்துவமனைக்கு எடுத்து சென்றவர்கள் யார்?  அந்த ஊழியர்களும் பார்க்க வில்லையா? ஒருவருமே குரல் எழுப்பவில்லை, இதுவரை எந்த ஊடகமும் அதற்கு முன்மொழியவில்லை, கடைசி வரை யார் யார் பார்த்தார்கள், அவ்வளவு பெரிய அம்மாவை சசிகலா அம்மாவே தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் போட்டார்களா?  ஆம்புலன்சில் எடுத்து சென்றது யார்? ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றது யார்? 

அதான் அந்த அம்மா போயிருச்சுல்ல, இப்போ இதை பற்றி பேசினா மட்டும் அந்த அம்மா வந்திருமா என்ன? என்று சில மேதாவிகள் கேள்வி எழுப்பிக்கொண்டு தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த அம்மா வராது, ஆனால் உண்மை வெளிவர வேண்டும்...

இயற்கை மரணமா? இந்த கேள்விகளை எல்லாம் நீதிமன்றமோ அல்லது எந்தவித பொதுநல வழக்கோ இதுவரை பதிவு செய்யப்படாதது ஏன்? நீதிமன்றத்திற்க்கே விருப்பம் இல்லையா? 

அம்மாவின் விசுவாசிகள் என்று வால்போஸ்டர் அடித்து ஒட்டியவர்கள், இப்போது காணாமலே போய் விட்டார்கள்...வேதா இல்லத்தில் வேலை பார்த்தவர்கள் எங்கே போனார்கள்? கொடநாடு காவலாளி கொலை செய்யப்பட வழக்கு என்னவானது? ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சர்களின் கோமாளித்தனமான பேச்சுக்கள்? 

அம்மாவின் மருத்துவ ரிப்போர்ட்டை இதுவரை அப்போல்லோ சமர்ப்பிக்காதது ஏன்? 
ஒரு நோயாளி அட்மிட் செய்யப்பட்டால் அவரது நோயின் தன்மை குறித்த முழு அறிக்கை வெளிவரவேண்டும், ஆனால் இதுவரை பைனல் ரிப்போர்ட் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதே! 

நீதியும், நியாயமும் செத்து போய் விட்டதோ, ஒரு முதலமைச்சருக்கே இந்த கதியெனில், சாமானியனின் நிலை என்னவாகும்? பதவி ஆசையில் மாறி மாறி பேசி வரும் அமைச்சர்கள், தினகரனை, சசிகலாவை ஆதரித்தவர்கள், இன்று எடப்பாடியையும், ஓபிஎஸ் சை ஆதரித்து பேச காரணம் என்ன? இது அத்தனையும் வாட்சப்பில் வலம் வந்து கொண்டுதானே இருக்கிறது? பொதுமக்களும் இதை பார்த்து கொண்டுதானே இருக்கிறார்கள்?

உலகம் முழுவதும் சுற்றும் மோடிக்கு இதை விட அவமானம் இருக்க முடியாது, நாட்டில் இருக்கும் அப்போல்லோ மருத்துவமனைக்குள் நுழைய முடியவில்லை, இதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் வந்து சென்றிருக்கிறார்கள், அப்படி என்ன தீராத வியாதி? 

அத்தனை நாட்கள் பலம் பெற்றிருந்த துக்ளக் ஆசிரியர் சோ அடுத்த நாளே மரணித்து போனார், தோழியின் மரணத்தை சகிக்க முடியாத சோ வும் மரணமடைந்தார் என்று சொல்லப்பட்டது. நட்பிற்கு அடையாளம் என்று புகழாரம் சூட்டினார்கள். என்னதான் நடந்தது? அப்போல்லோ ஆஸ்பத்திரியில் அம்மா இல்லை என்று அவர் உலகிற்கு சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் காரணமாக அவரும் முடித்து வைக்கப்பட்டாரா? 

இந்த சந்தேகங்களுக்கு முக்கிய காரணம், உள்ளே என்ன நடந்தது என்ற முழு விபரம் தெரியவில்லை, நாங்கள் அம்மாவை பார்க்கவே இல்லை என்ற அமைச்சர்களின் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களே இத்தனை கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் மூல காரணம், உனக்கென்ன அதிகாரம் இருக்கிறது, இது அப்போல்லோவை அவமானப்படுத்தும் செயல் என்று அப்போல்லோ நிர்வாகிகள் கூறினால் மகிழ்ச்சி, அப்படியெனில் விளக்கம் கொடுங்கள், சிசிடிவி கேமிராக்களில் பதிவு செய்த காட்சிகளை மக்களுக்கு ஒளிபரப்புங்கள், செப்டம்பர் 5 முதல் டிசம்பர் 5 வரை நடந்த சம்பவங்களின், கொடுத்த மருத்துவத்தின் ரிப்போர்ட்களை மக்களுக்கு தெரிவியுங்கள் பார்க்கலாம், 

இத்தனை எதிர்க்கட்சிகள் கேள்விகள் கேட்ட பிறகும், மவுனம் சாதிப்பது எதற்கு? அம்மா மருத்துவமனையில் எடுத்து கொண்ட டிரீட்மென்ட்டை நாங்கள் வீடியோ எடுத்து வைத்திருக்கின்றோம் என்று தினகரன் இப்போது கூறக்காரணம் என்ன? இதை ஏன் ஆரம்பத்திலேயே வெளியிடவில்லை! இதை ஏன் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யவில்லை?

இது மக்கள் ஆட்சிதானே, மக்களிடம் ஒளிபரப்பு செய்து காட்டலாமே! தேர்தல் வரும்போது அதை போட்டுக்காட்டி அனுதாப ஓட்டுக்கள் பெற எடுக்கும் முயற்சியா இது? எதிர்வரும் தேர்தலில்  வாக்குவாதங்கள் இருக்கிறதோ இல்லையோ, தீவிர பிரச்சாரங்கள் இருக்கிறதோ இல்லையோ நிச்சயம் பண மழை கொட்டும் என்பதில் துளியும் ஐயமில்லை, 

அதிமுக 1, அதிமுக 2, அதிமுக 3, க்குள் இருக்கும் போட்டியில் திமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும், தேமுதிக கட்சியும் போட்டி போட உள்ளது, இதில் புது கட்சியாக  கமல்முக வும் புதிதாய் வருமென்றால் மக்களின் வாக்கு எங்கிருக்கும்?  

சின்னம்மா நாட்டுக்காக தியாகம் செய்து சிறைக்கு சென்றது நிச்சயம் ஒரு மிகப்பெரிய அனுதாப ஓட்டாக இருக்கும்! ஆக மொத்தம் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு சென்று திரும்பி அதையே தியாகி போல அடையாளம் காட்டி வாக்குகள் பெறுவது என்பது நாகரீகமாகி விட்டது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஏர்செல்-மேக்சிஸ் வழக்குகள் இன்னமும் தள்ளிப்போய்க்கொண்டேதான் இருக்கிறது, 

திகார் செயிலோ, பார்ப்பன அக்ரஹாரா சிறையாகட்டும், தியாகிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதானே இருக்கிறது? மம்தா, மாயாவதி, அத்வானி, மன்மோகன்சிங், சோனியா காந்தி என்று மத்தியில் யாருமே குரல் எழுப்பவில்லை, இந்த மரணத்தை அவர்கள் விரும்பினார்களா? அல்லது ஏற்றுக்கொள்கிறார்களா? குறைந்தது, தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு கண்டனக்குரல் கூட எழுப்பவில்லையே! 

கலைஞருக்கு மட்டும் திராணியிருந்திருந்தால் இன்று தமிழ்நாட்டில் புரட்சி வெடித்திருக்கும், அதிமுக அணியும் சின்னாபின்னமாயிருக்கும் என்பது ஊடகவியலாளர்களின் கூற்று! உண்மைதானே, ஆனால் திமுகவும் தற்போது பலமிழந்து போயிருப்பது நிதர்சன உண்மை! அவ்வப்போது குரல் கொடுத்து நான் இங்கே இருக்கிறேன் என்பது போல அட்டெண்டன்ஸ் போட்டு கொண்டிருக்கும் திமுக! 

அப்போல்லோ முதல் ஐநா சபை வரை அனைத்துமே மர்மமாக இருக்கிறது.....

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. இந்த மாதிரி மொக்கையா பதிவு போடுறதுக்கு எங்கேயாவது பிச்சை எடுக்க போகலாம்
    மேலே போடபட்டிருக்கும் கமெண்ட் என்னுடையது அல்ல
    -- பிரபு காளிதாஸ்

    ReplyDelete
  3. தாராளமாக எடுங்கள், தவறில்லை. அது உங்களது விருப்பம். நன்றி!

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...