பங்காளிங்க..

Thursday, September 28, 2017

234 கேமிரா, 234 தொகுதி, பிக் பாஸ் மோடி வழங்கும் கமல் CM, ஓவியா கொபசெ......

ஆற்றினை தெர்மோகோலை வச்சு மூடுறானுங்க! துணிய துவைச்சிட்டே இருக்காதீங்க, நொய்யல் ஆத்துல சோப்பு நுரையா வருதிலே,  என்னடா நடக்குது தமிழ்நாட்டுலே,  இப்படியெல்லாம் உள்ள அறிவு மேதாவிகளை தமிழ் நாட்டு அமைச்சர்களாக்கி இருக்கிறோமே! எல்லாம் உங்களை சொல்லணும்! 
ஆக்கப்பூர்வமான அமைச்சர்களை நாம் ஆட்சி கட்டிலில் அமரவைத்திருக்கின்றோம் என்று நினைக்கும் போது உடம்பெல்லாம் பூரித்து போகின்றது. ஒரு வார்த்தை கூட கோர்வையாக பேசத் தெரியாத கட்சி எம்எல்ஏக்களை கட்டுப்படுத்த முடியாத ஒரு முதலமைச்சர், 

தமிழ்நாட்டு அரசியல் தகிடுதத்தம் போட்டு கொண்டிருக்கிறது! நாட்டு பிரச்சினைகள் தலைக்கு மேல் குவிந்து கிடக்க சீரழிந்து போனது தமிழகம்! 

மீண்டும் தலைதூக்கும் வழிப்பறி கொள்ளைகள், திருட்டு சம்பவங்கள், லைசன்ஸ் அசலை கொண்டு வாங்க, இதனால் நாடு பொருளாதாரம் உயர்ந்து விடும் என்று சொல்லும் அதிமேதாவிகள், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே உள்ள உறவு தினமும் சீரழிந்து வருகின்றது, 

இதுவரை எத்தனையோ விளக்கம் கேட்டும் விளக்கம் அளிக்க முடியாமல் தவிக்கும் அப்போல்லோ, மக்கள் தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், ஹாஸ்பத்திரியில் என்ன நடந்தது என்று உங்கள் ஜெயா தொலைக்காட்சியிலேயே போடலாமே? மக்கள்தானே உங்கள் கடவுள், மக்களுக்கு இதை போட்டு காட்ட வேண்டியதுதானே, தேவைப்படும் நேரத்தில் தேவையான இடத்தில் போட்டுக்காட்டுவோம் என்று சொல்கின்றீர்களே? 

ஏன் இன்னும் வீடியோ எடிட்டிங் செய்யபடவில்லையா? ஏதோ ஒரு மோசமான விவகாரம் நடந்தேறி இருக்கிறது? அது மட்டும் உறுதி! முன்னுக்கு பின் முரணான தகவல்கள், ஒரு நோயாளியாகத்தான் இருந்தாரா? அல்லது நோயாளி ஆக்கப்பட்டாரா? என்ன நடந்தது? 

நாட்டு பிரச்சினைகள் நாலா பக்கமும் நாறி கொண்டிருக்க இங்கே கேமிராக்கள் இருந்ததா இல்லையா, என்று விவாதக் களம் ஓடிக்கொண்டிருக்கிறது.  கேமிரா தட்டுப்பாடு என்றால் கமலஹாசனிடம் சொல்லி பிக் பாஸ் கேமிராவை வாடகைக்கு எடுத்திருக்கலாம்! ஒரு வீட்டிற்கு 30 கேமிராக்கள் தேவையா? 

அதுவும் கூத்தாடிகளை வைத்து கூத்தடித்து கொண்டிருப்பதையும் மக்கள் பார்த்து கொண்டுதானே இருக்கிறார்கள். கமல் ஆட்சிக்கு வந்தால் தெருவுக்கு 300 கேமிராக்கள் வைத்து சோதனை செய்வாரோ?  

ரஜினிக்கு பிஜேபி சரியாக இருக்கும், என்னோடு வராதீங்க என்று அவர் சொல்ல, ரஜினி வழக்கம் போல மவுனம் சாதிக்கின்றார், ஏதோ அடுத்த  வாரமே கட்சியை ஸ்டார்ட்  செய்யுற மாதிரி போட்டோவுக்கு போசெல்லாம் கொடுத்தாரு, 
ஆனா 30 கேமிரா வச்சு ஆட்சியை பிடிச்சிருவாரு போல கமலஹாசன், மக்களை சிந்திக்க விடாமல் செயல்பட்டு வருகிறது ஒரு குழு, கமல் வந்தா நல்லா செய்வாரு, என்று மக்களை பேச வைக்க முயற்சிகள் நடக்கிறது. அவர் பாயிண்ட்டா பேசுறாருன்னு ஒரு பில்ட்அப் வேற, தமிழ்மணத்திலே ஆயிரக்கணக்கில் வலைப்பூ வச்சிக்கிட்டு அருமையா பேசுறவங்க இருக்காங்க, 

மக்கள்தான் விழித்தெழனும், இழவு காத்த கிளி மாதிரி ஏகப்பட்ட கட்சிகள், காட்சிகள், ஈழத்தமிழன் பிரபாகரன் செத்த போதும் இப்படித்தான் இருந்தோம், ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கில் செத்த போதும் இப்படித்தான் இருந்தோம், இன்னிக்கு அம்மா செத்திட்டா, அனிதா செத்திட்டா, விஷ்ணுபிரியா செத்திட்டான்னு சொன்னா மட்டும் விழிச்சிடவா போறோம்!

நீட் தேர்வுக்கு பரிந்துரைச்சவங்க, மீத்தேன் திட்டத்துக்கு பரிந்துரைச்சவங்களே அப்படி ஒரு சம்பவம் நடக்காத மாதிரி அவங்களே போராடுறாங்க பாருங்க, கலக்குறாங்க போங்க! சாமானியனை சட்டினியாக்காம விட மாட்டாங்க....

கேஸையும் போட்டுட்டு திருப்பி அதே கேஸுக்கு எதிராவே போராடுறதும் இருக்குது பாருங்க, அருமை, அருமை....

அந்த அம்மா இருக்கிறப்ப ஒருத்தன் கூட ஊருக்குள்ளே எட்டி பார்க்க முடியாது, அந்த அம்மா போயிருச்சானு கன்பார்ம் பண்ண பிறகுதான், சமாதிக்குள்ளே இருந்து வந்திருவாங்களோன்னு ஒரு பயம் இருந்துகிட்டுத்தான் இருந்துச்சு, 

அம்மா வாழும்போது ஆணவக்காரி, திமிர் பிடித்தவள் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று அந்த அம்மா இல்லாததை நினைத்து கண்ணீர் விட்டிருப்பார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். 

அவள் சரியான தலைமையை அடையாளம் காட்டாமல் மரணமடைந்து விட்டார்கள்  என்று சொல்லும் நபர்கள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் மரணமடைய வில்லை, மரணமடைய செய்து விட்டார்கள். தங்க முட்டையிடும் வாத்து ஒவ்வொரு முட்டையாக இட்டு கொண்டிருந்தது, அதை ஒட்டுமொத்தமாக அறுத்து வாத்தையும் கொன்று விட்டார்கள், தங்க முட்டையையும் விட்டு விட்டார்கள். 

சாதாரண காய்ச்சலை கூட குணப்படுத்த முடியாத உலகத்தரம் வாய்ந்த அப்பொல்லா மருத்துவமனையா? 

கூத்தாடிகளை இனிமேல் கழட்டி விட்டுவிட்டு புதிய மன்னர்களை உருவாக்குவோம், தமிழ்நாடு கூத்தாடிகளின் பின்னால் நிற்பதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! 30 கேமிராக்கள் வேண்டாம், ஒரு மனசாட்சி இருந்தால் போதும்! 

5 comments:

  1. எல்லாம் சரியாதான் சொன்னீங்க பிக்பாஸ் 100வது நாள் நிகழ்ச்சிக்கு ஓவியா வருமா?! ஆரவ் ஓவியா லவ் கைகூடுமா?! என் கவலை எனக்கு

    ReplyDelete
    Replies
    1. அது சரி, உங்க கவலை உங்களுக்கு,

      Delete
  2. Jaya prostitute 'kku ethuku sombu adikara nayaae.

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு தரக்குறைவாக விமர்சிக்கும் உங்களுக்கு ஜெயா உயிரோடு இருந்த போது இந்த வார்த்தையை சொல்ல துணிவிருந்ததா? இப்போது கூட உங்கள் பெயர் மற்றும் விலாசம் சொல்ல துணுவிருக்கிறதா? தோழரே!

      Delete
    2. அப்போ ஜெயா ஆட்சியில் கருத்து சுதந்திரம் , ஜனநாயகம் இருந்திருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
      இதற்காகத்தான் ஜெயாவை பலர் எதிர்த்தார்கள்.

      Delete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...