பங்காளிங்க..

Monday, June 18, 2012

நம்ம "நிலா" வா இது? நம்பவே முடியலைப் பா!


சமீபத்துல இணையத்துல வாடகைக்கு வீடு  தேடிக்கிட்டு இருந்தப்ப ஒரு சில படங்களை பார்த்தேன், எங்கயோ பார்த்திருக்கேனே னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்...நிலா வ இவ்வளவு குளோஸ் அப்புல பார்த்ததை நினைச்சு பிரமிச்சு போயிட்டேன்... உடம்பெல்லாம் புல்லரிச்சு போயிடுச்சு. நீங்களே அந்த கண்ராவிய பாருங்களேன்..
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

நான் சொல்றது ஆகாயத்துல இருக்கிற "நிலா" ங்க? நீங்க என்னை அனாவசியமா தப்பா கற்பனை பண்ணிடாதீங்க..


ச்சே ஏன் இவ்வளவு கன்றாவியா இருக்குனே தெரியலையே???
சினிமா, டிவி, புக்குலே எல்லாம் எவ்வளவு அழகா இருக்கா, ஆனா  இவ்வளவு  நெருக்கத்துல ரொம்ப கண்றாவியா இருக்காளே...நான் கூட பல நாள் நைட்டு அவளை நினைச்சு தூங்காம 
இருந்திருக்கேன்...நான் கவிஞர்கள் வர்ணிச்ச இந்த நிலாவை நினைச்சுத் தான் தூங்காம இருந்தேன் க..



கடைசியிலே இப்படி ஏமாத்திபுட்டாலே னு நினைச்சா கவலையா இருக்கு.


*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

அதுக்கப்புறமா நான் பிரமிச்ச அந்த படங்களை என்னோட அம்மாகிட்டே காண்பிச்சேன்..அவங்க கொஞ்ச நேரம் உத்து பார்த்திட்டு, "அடேய், உனக்கு வேற வேலையே இல்லையா ?..அம்மாவையே டெஸ்ட் பண்ணி பாக்குறியா?

ஏன்டா நம்ம வீட்டு பால் பாத்திரம், இருப்பு சட்டி எல்லாம் இவ்வளவு கன்றாவியா இருக்குனு ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுறியா, மவனே...உன்னை? என்று கம்பெடுத்து அடிக்க வந்துட்டாங்க பா..

அட இது நம்ம வீட்டு பாத்திரத்தோட அடிப் பாகமா? நான் கூட நிலாதான் நினைச்சிட்டேன் என்று  தலையை சொறிந்தேன் ????


4 comments:

  1. ஹா ஹா ஹா ஹா அட மக்கா முடியல...!

    ReplyDelete
  2. ஹா ஹா எப்படியெல்லாம் யோசிக்கராங்கையா....

    ReplyDelete
  3. Ha ha ha.......super bosss..............

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...