பங்காளிங்க..

Monday, September 18, 2017

ஜாக்டோ-ஜியோ வீட்டுக்கு அனுப்புங்கள், வி ஆர் வெயிட்டிங்!!!












நீங்கள் எல்லோரும் என்ன சாதித்து விட்டீர்கள் என்று சம்பள உயர்வு கேட்க்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அரசு இயந்திரங்கள் செயல் இழந்து நிற்பதாக ஆங்காங்கே தகவல்கள் வருகின்றது. யார் குடும்பம் எப்படி சீரழிந்தால் என்ன? எனக்கு என் குடும்பமே பெரியது என்று போராடிக்கொண்டிருக்கும் உங்களது தியாக உணர்வினை நாங்கள் பாராட்டுகின்றோம். 
உங்கள் இயக்கம் வேண்டுமானால் மிக பெரியதாக இருக்கலாம். வகுப்பறையில் பாடங்கள், பாடத்திட்டங்கள் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா? செயல்படுகிறதா? தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் வாங்கும் சம்பளத்தை விட மூன்றில் இருந்து நான்கு மடங்குகள் அதிகமாக வாங்குகிண்றீர்கள்? இன்னும் உங்களுக்கு போதவில்லையா? 

உங்களுக்கு நீங்கள் கேட்ட சம்பளங்களை வழங்க நாங்கள் மறுக்கவில்லை, தனியார் நிறுவனங்களில் நடப்பது போல ப்ரோமோஷனல் டெஸ்ட் வருடம்தோறும் வைத்தால் அதை எழுத நீங்கள் தயாரா? 

ஒவ்வொரு வருடமும் பள்ளி ஆண்டுத்தேர்வு முடிந்த பிறகு அந்தந்த மாவட்டங்களில் அந்த வகுப்புகள் நடத்திய ஆசிரியர்களுக்கு ஒரு தேர்வு நடத்தப்படவேண்டும். ப்ரோமோஷனல் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதாவது (PET), Promotional Entrance Test இல் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு கல்வி எடுக்க அனுமதி வழங்கப்படுவார்கள் என்ற விதி அமலுக்கு வர வேண்டும். 
ஒவ்வொரு ஆசிரியருக்கும் 30 மாணவ, மாணவிகள் கொடுக்கப்பட வேண்டும். அந்த 30 மாணவ, மாணவியரும், அவர்கள் பாடங்கள் அனைத்திலும் 75% மேலாக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், அவர்களுக்கு அந்த மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும். இந்த விதிகளை அவர்கள் ஏற்க தயாரா? 

ஒருவர் கூட முன்வரமாட்டார்கள். எந்த ஒரு அரசு நிறுவனமாக இருந்தாலும் சரி, அவர்களின் நேர்மையான பணி என்பது நூற்றில் பத்து முதல் 30 விழுக்காடு வரையே நேர்மையாக பணியாற்றுகின்றார்கள், மீதமுள்ள அனைவருமே வாங்கும் சம்பளத்திற்கு கூட வேலை பார்ப்பதில்லை. 

அப்படி அவர்கள் பணியாற்றி இருந்தால், என்றைக்கோ அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியில் பலத்த வளர்ச்சி பெற்றிருப்பார்கள். அரசுப்பணியில் மந்தமாகி இருக்காதே!

நீட் தேர்வில் நீட் பாடப்பிரிவில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் மிக குறைவு! பனிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவியால் என்சிஇஆர்டி குழுவினரால் நடத்தப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ள பாடத்தில் மிக குறைந்த மதிப்பெண்கள் பெற்று அவமானப்பட்டு உயிரை மாய்த்தாலே, அது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு சவுக்கடி என்றுதானே சொல்ல வேண்டும். உங்களால் அந்த மாணவியின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத போது, யாராவது ஒரு ஆசிரியர் அரசு பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ அளவிற்கு பாடத்திட்டங்களை மாற்றுங்கள் என்று குரல் கொடுத்து வீதியில் இறங்கி போராடியிருந்தால், உங்களுடைய சம்பள உயர்வுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்கி இருக்குமே!
மிக கேவலமான விஷயம் என்னவெனில், எங்கோ ஒரு இடத்தில் ஒரு அரசு ஆசிரியரோ, ஊழியரோ சிறப்பாக பணியாற்றிவிட்டால் அவர்களை வெற்றி நாயகனாக, நாயகியாக கொண்டாட வேண்டிய அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். இது அவர்கள்  சம்பளத்திற்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலை இது, ஆனால் அதையே நாம் மிகப்பெரிய விழாவாக கொண்டாடிய வேண்டிய இடத்தில் இருக்கின்றோம். 

காலணாவாக இருந்தாலும் அரசு உத்தியோகம் வேண்டும் என்ற காலம் மலையேறிவிட்டது. எப்போது கேட்டாலும், பஞ்ச பாட்டு பாடுவதே அவர்களின் வேலையாக இருக்கும். ஒரு அரசு அலுவலகம் மிக சுத்தமாக இருந்து விட்டால் ஏதோ அருங்காட்சியகத்தை பார்ப்பது போல பார்க்கின்றார்கள். 

உண்மையில் சுத்தமாக இருக்க வேண்டிய சுகாதாரத்துறை அலுவலகம் கூட சுற்றி குப்பைகளோடுதான் இருக்கின்றன. ஏன் இந்த அவலம்? அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை,  அவர்களுக்கு தேவை சம்பளம், ஊதிய உயர்வு முதலியவையே! 

இதுவரை நீங்கள் வாங்கிய சம்பளத்திற்கு உங்களின் சாதனைகள் என்ன? என்று கேட்டுப்பாருங்கள், அவர்கள் அன்றாடம் செய்யும் வேலையை மிகப்பெரிய சாதனையாக பட்டியலிடுவார்கள். இவர்களது வாக்கு வங்கிக்காக, தபால் ஓட்டுக்காக ஒருவர் செய்த கேவலமான காரியம், இன்று அவர்கள் வேலைகளை விட்டு விட்டு வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்பது நியாயமானதா? என்று ஒவ்வொரு தனியார் ஊழியரிடமும் கேட்டு பாருங்கள். தனியாரில் ஒருவர் செய்யும் வேலையை அரசுத்துறையில் 30 பேர் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் கடைசி வரை அந்த வேலை முடியவும் செய்யாது.

அதுதான் அரசிற்கு, தனியாருக்கும் உள்ள மாறுபாடு! இனிமேல் அரசுத்துறையில் இருப்பவர்கள் வருடத்திற்கு இவ்வளவு டார்கெட்டை முடித்து விட்டு போராடுங்கள் என்று சொல்லிப்பாருங்கள். ஒருவர் கூட வீதிக்கு வரமாட்டார்கள். அதுதான் உண்மை. 

ஆண்டுதோறும், அரசுத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு வைக்கப்படும் என்று ஏதாவது ஒரு அரசியல்வாதி சொல்லட்டும் பார்க்கலாம், அவர்களும் சொல்ல மாட்டார்கள், காரணம் வாக்கு வங்கி போய் விடுமே! என்ற அச்சமே! 

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சராசரி ஊழியனின் நூற்றில் ஒரு பங்கு வேலையை கூட அரசு ஊழியர்கள் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகின்றது.

மின்சார கட்டணம் கட்ட பெரிய கியூ நின்று கொண்டிருக்கிறது. சிஸ்டத்தில் F1 அடித்தால் உள்ளே செல்லலாம் என்று சொல்லி பாதியிலே நிற்கின்றது. ஆனால் அதை அடிக்காமல், சர்வர் டவுன் என்று சொல்லி அட்டையை தொங்கவிட்டுட்டு போனில் அரட்டை அடித்து கொண்டிருக்கிறது மின்வாரியம்.

ஒரு தவறு நடந்தால் அதை செய்ய கூடாது என்று இருக்கிறார்கள், எத்தனை அரசு ஊழியர்களுக்கு இன்று மின்னஞ்சல் அனுப்ப தெரியாது தெரியுமா? @ இந்த சிம்பலை சொல்லத் தெரியாத எத்தனை அரசு ஊழியர்கள் இன்று ஊதிய உயர்வை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் பட்டியலிடட்டுமா?

தொழில்நுட்பம் எத்தனை வளர்ந்தாலும் இன்னும் டாட்மேட்ரிக்ஸ் பிரிண்டரில் பிரிண்ட் எடுத்து கொண்டிருக்கும் அலுவலகங்களை அடையாளம் காட்டட்டுமா? காரணம் கேட்டால் மேலதிகாரிகள் இதைத்தான் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள். மேலதிகாரிகள் சம்பளம் கொடுக்க வில்லை, சம்பளம் பிடித்தம் செய்து விட்டார்கள் என்று சொன்னால் மட்டும் வீணாய் போன யூனியனை கைகளில் வைத்து கொண்டு போராடத் தெரியும் உங்களுக்கு மேலதிகாரிகளிடம் மக்களுக்கு தேவையானவற்றை வழங்க மட்டும் எரிச்சல் வருகின்றதா?

அரசுப்பேருந்துகள் ஓட்டை ஒடிசலாக இருந்தாலும் எடுத்து இயக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள், உங்களுக்கு வழங்கப்பட்ட கிழிந்த செல்லாத நோட்டுக்களை சம்பளமாக பெற்றுக்கொள்வீர்களா? மக்களால்தான் நீங்கள், மக்கள் உங்களை நாடி வராவிட்டால், உங்களால் மக்கள் சேவகனாக பணியாற்ற முடியாது என்பதை மறக்காதீர்கள், அரசு என்றாலே அதை இளக்ககாரமாக பார்க்கும் நிலை மாற வேண்டும். அதற்கு நீங்கள் எப்போது போராட்டம் செய்வீர்கள் என்று காத்துக்கொண்டிருக்கின்றோம் நாங்கள்.

இன்றைய தலைமுறை காத்துக்கொண்டிருக்கிறது, அரசு இயந்திரங்களை, பதவிகளை கைகளில் எடுக்க, ஜாக்டோ-ஜியோவை வீட்டுக்கு அனுப்புங்கள். தமிழகத்தில் ஆட்சியே நடக்கவில்லை, தமிழகம் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது, இந்த நேரத்தில் நீங்கள் போராட்டம் செய்யுங்கள், அப்போதுதான் ஆட்சி கவிழும், நமக்கு நடக்க வேண்டியது நடக்கும் என்று யாரோ தூண்டி விட்டதை நம்பி, வெட்டியாய் போராட்டம் நடத்துபவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்,

இளைஞர்களை அந்த பதவிகளுக்கு களமிறக்குங்கள், இன்னொரு அனிதா மரிக்க மாட்டாள், நாடும், நாட்டு மக்களும் சுபீட்சமாவார்கள். 

1 comment:

  1. They are not fighting for salary increment.

    They want to know the Contributory Pension Scheme's position. Where it is? Whether the government paid its contribution or not?

    Why not proper CPS settlement and clearance for retired employees?

    With regard to Anitha as per your statement she scored 1176 out of 1200. This she achieved by her efforts and guidance of the teachers you blame.

    But the NEET on the basis of different syllabus which is not relevant to Tamil Nadu and different type of question for every state.

    You are comparing Private Job. Why not you ask your private employers and Kalvi Thanthaigal to start their units and schools in remote villages where there is no employment and school facility.

    Finally all teachers and employees in the government are not old as you think and you can't be always young.

    Try to under stand their real problem. check and confirm with various details.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...