பங்காளிங்க..

Thursday, December 13, 2012

நெஞ்சுக்கு நீதி????

நெஞ்சு வலி வந்துட்டா என்ன செய்யனும்னு நிறைய படத்துல நாம பாத்திருப்போம்...உடனே படத்தோட நாயகன் அல்லது நாயகி ஓடிப் போயி அவங்களுக்கு அவசர உதவி செஞ்சு காப்பாத்திப் போடுவாங்க..அதுக்கப்புறம் சில சமயம் டூயட் பாடுவாங்க.சில சமயம் கதையிலே டுவிஸ்ட் வரும்..

ஆனா கற்பனை பண்ணிப் பாருங்க...யாருமே இல்லாத இடத்துல திடீர் மாரடைப்பு வந்தா என்ன ஆகும்?? ஒன்னும் ஆகாது...சொல்ல வேண்டியவங்களுக்கு சொல்லி அனுப்பிடுவோம்..அப்புறம் சொத்து சண்டை, குடும்ப சண்டைதான் மிஞ்சும்..

இது காலம், காலமா நடந்துகிட்டு வருது..ஆனா தற்போது அதற்கும் ஒரு வழியை அமெரிக்காவின் ஜான்சன் சிட்டி சென்டருல கண்டுபிடிச்சிருக்காங்க..அதையும் ஐசியு ல இருக்கிற நோயாளியோட அனுமதி வாங்கி சோதனை செஞ்சு பார்த்திருக்காங்க..

என்ன கண்டுபிடிப்பு, மாயக் கண்டுபிடுப்புன்னு நினைக்கிறீங்களா? செலவே இல்லாத வைத்தியம் இது!
என்ன மனம் தைரியமா இருக்கணும்..படபடப்பு கொஞ்சம் கூட இல்லாம இந்த வேலையை செய்ய சொல்றாங்க..
அப்படி செஞ்சா நம்மளை நாமே காப்பாத்திக்க முடியுமாம்..

ஒண்ணுமே இல்லை, அந்த மாதிரி நெஞ்சு வலி வர்றப்ப நமக்கு உடம்பெல்லாம் வேர்த்து, மூச்சு திணறல் வருமாம்..கைகால் உளைச்சல் இருக்குமாம்..அந்த நேரத்துல நாம நல்லா அடி வயிறு வலிக்கிற மாதிரி சத்தமா இருமனுமாம். ஒவ்வொரு வாட்டியும் இருமும் போது  நல்லா மூச்சை இழுத்து விட்டா அடைபட்டிருக்கிற அடைப்பு விட்டுப் போயி நம்மால எளிதா மூச்சு விட முடியுமாம்...

மூச்சை நல்லா இழுத்து விடும்போது நம்ம நுரையீரலுக்குள்ளே ஆக்சிஜென் போயி வரும்...அதோட ஒவ்வொரு தடவையும் இருமுறப்ப  அடைபட்டு நிக்குற ரத்த ஓட்டம் மீண்டும் இயல்பா ஓடத் தொடங்கிடுமே நு அவர் சொல்றாரு...

அவ்வளவுதான் சாவோட விளிம்பை தொட்டு விட்டு வந்துற மாட்டோம்???? இதுதாங்க என்னோட நெஞ்சுக்கு நீதி !!!!

2 comments:

  1. அனைவருக்கும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே உங்களின் நெஞ்சுக்கு நீதி.

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...