பங்காளிங்க..

Wednesday, November 7, 2012

மூளை வேலை செய்யாத பதிவர்களே?

என்னான்னு தெரியலை டாக்டர், பேசிகிட்டே இருந்தேன்..என்ன நடந்துச்சுனே தெரியலை, எதைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தேன்னு எனக்கே புரியலை, எல்லோரும் சிரிச்சிட்டாங்க..அதுக்கப்புறமா தான் சுயநினைவிர்க்கே வந்தேன்..இது எல்லோரும் சராசரியாக சொல்லும் வார்த்தை..

சில சமயங்களில் மனசே சரியில்லை..ஒரு வேலையும் ஓட மாட்டேங்குது என்று சொல்வதையும் கேட்டிருக்கின்றோம். மனசுக்கும் வேலைக்கும் சம்பந்தமே கிடையாது. இது மூளைக்கும், வேலைக்கும் சம்பந்தப்பட்டது.

இப்படி அவ்வப்போது நின்று போகும் மூளையை எப்படி வழிக்கு கொண்டு வருவது..?

தோப்புக்கரணம் போட்டால் நல்லது! அதுவும் எப்படி? வலது கையை இடது காதிலும், இடது கையை வலது காதிலும் குறுக்காக பிடித்து அமர்ந்து எழுவது...அப்படி செய்யும்போது நமது ரத்த ஓட்டம் சீராகி, மூளை புத்துணர்ச்சி பெறுகின்றது...

வலது கை கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரலால் காதின் மென்மையான பகுதியை பிடித்து இழுப்பதால் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் புத்துணர்ச்சி பெருகின்றதாம். அதனால் தானாகவே மூளைக்கு முழிப்பு எற்படுகின்றதாம். தோப்புக்கரணம் எப்போ எல்லாம் நாம போடுறோம்?...அது சின்ன பிள்ளைங்க போடுறது, நாமெல்லாம் அதை போட்டுக்கிட்டு இருக்க முடியுமா? என்று எள்ளி நகையாடும் பெருசுகளே...அக்காலத்தில் முக்குக்கு, முக்கு முச்சந்தி பிள்ளையாரை எதுக்கு வச்சாங்க தெரியுமா? நீ ஓயாம தோப்புக்கரணம் போடு னு  சொன்னா கேட்க மாட்டே....அதுக்குத்தானே தலைவா!!!
ஆனா இப்போ எல்லாம், காருல உக்காந்துகிட்டே சலாம் போட்டுக்கிட்டு போறீங்களே..கடவுளுக்கே ஹாய்  சொல்லிட்டு டாட்டா காண்பிச்சிட்டுத்தான் போய்க்கிட்டு இருக்கோம்...பிறகு எங்கே தோப்புக்கரணம் போடுறது எல்லாம்??

இப்படி பிள்ளையாரு சிலையை வச்சாவது நீ தோப்புக் கரணம் போட்டு கும்பிட்டுவிட்டு போவியே னு  உங்களோட நல்லதுக்காக சொன்ன விஷயம் இது...முட்டு உளைச்சல் இப்படி உக்காந்து, உக்காந்து எழுந்திருக்கும் போது  விடுபட்டு போயிடுமாம். அதுக்குத்தான் இந்த கலவரம் எல்லாம்...அதுனால தப்பு செஞ்சா நீங்களே தோப்புக்கரணம் போட்டுக்கோங்க..ஆனா எதுவுமே ஒரு லிமிட்டுதான்..ஒரு நாளைக்கு 20 தோப்புக்கரணம் போடுங்க...அதிகம் வேண்டாம்...புதுசா ஆரம்பிக்கிறவங்க 3 லே இருந்து ஆரம்பிங்க..முத நாள் 3, அடுத்த நாள் 5, இப்படி ரெண்டு ரெண்டா கூட்டிக்கிட்டே போங்க...தோப்புக்கரணம் உங்களோட வாழ்க்கைக்கு ரொம்ப நல்லது...அதுசரி மூளையே இல்லாதவங்க என்ன செய்யனும்னு கேக்காதீங்க....ப்ளீஸ்..அதுக்கு என்கிட்டே டிப்ஸ் இல்லை!!! 

 எந்த ஒரு விசயத்தையும் பாசிடிவ்வா எடுத்துக்கணும்...இதை எதுக்கு சொல்றேனா...தலைப்பை பார்த்திட்டு தப்பா முடிவெடுத்திராதீங்க

3 comments:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
  2. இருபது தோப்புகரணம் இப்பொழுது போட்டுவிட்டேன் நண்பரே! வியர்க்கிறது. இதுபோல் தினமும் காலையும், மாலையும் செய்யவேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறேன். இதுவே நல்ல உடற்பயிற்சியாகத்தான் இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. Adhukkudhaan school il ozhungaa padikkaadha students ai thoppukaranam poda sonnaanga. But ippollam appadi senjaa torture nu solli teacher ai arrest panniduvaanga

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...