பங்காளிங்க..

Saturday, June 4, 2011

ரகசிய (வக்கிர) கேமராக்கள்

ரோட்ல நடந்து போறது இப்போ எல்லாம் ரொம்ப டென்சனா இருக்கு, அதிலும் பொம்பள பிள்ளைங்க நிலைமை ரொம்ப மோசமா இருக்கு....

முந்தி எல்லாம் ஈவ் டீசிங் பண்ணுவானுங்க...

இப்போ அதை விட ரொம்ப கொடுமையான விஷயம் இந்த செல் போனை வச்சிக்கிட்டி வம்பு பண்றானுங்க...

செல் போனை மெயினா பேசுரதுக்குத்தான், ஆனா ஒவ்வொருத்தனும் அதுல என்னென்னமோ பண்றானுங்க, 

வந்த புதுசுல அழகா ரிங் டோன் வச்சிக்கிட்டு இருந்தானுங்க, ஆனா இப்போ அதுல இருக்கிற காமெராவை வச்சு வித விதமா படம் எடுக்கிறானுங்க...

தன்னோட குடும்பத்தை, தன்னோட வீட்டு பிள்ளைகளை அழகா படம் எடுத்துக்கிட்டு இருந்தது போயி இப்போ பக்கத்து வீட்டு ஆண்ட்டி, பொம்பள பிள்ளைங்க, அடுத்தவன் பொண்டாட்டி னு படம் எடுக்க ஆரம்பிச்சிட்டானுங்க....

எப்போ கேப் கிடைக்கும் உள்ளே புகுந்து விளயாடலாமுனு மாதிரி எப்போ பொண்ணுங்களோட உடை விலகுதோ உடனே அதை கேமராவுல எடுத்து உடனே அதை இண்டர்நெட்ல போட்டு உலகத்துக்கே காம்பிக்கிரானுங்க...

அதுல அவனுகளுக்கு அப்படி ஒரு அற்ப சந்தோசம்....இதை தனி ஒருவனா தட்டி கேட்கவும் முடியாது, ஒட்டு மொத்த சமுதாயமும் விழிப்போட இருந்தாதான் இதை தடுக்க முடியும், குறைஞ்சபட்சம் இந்த தப்பை குறைக்கவாவது முடியும்....

உள்ளூர்ல உழுதுக்கிட்டு இருக்கிற உமாவை உலகம் பூரா படம் போட்டு கான்பிக்கிரானுங்க படுபாவி பசங்க....

உண்மையிலேயே ஒருத்தரோட அனுமதி இல்லாம அவங்க படத்தை போடுறது, இல்லேனா அவங்க பேரை யூஸ் பண்றது மிகப் பெரிய தண்டனைக்குரிய குற்றம்...ஆனா எதை பற்றியும் கவலைப்படாம வக்கிரத்தோட விவரிச்சு போடுறாங்க....

ஒரு அம்மா தன்னோட குழந்தைக்கு பால் கொடுக்கிறதை கூட படம் பிடிச்சி போடுறானுங்க, ஒரு கட்டத்துல அந்த குழந்தைக்கு அந்த படத்த பார்க்கிற சந்தர்ப்பம் வந்தா அந்த குழந்தை மனசு என்ன பாடுபடும்.....

இந்த மாதிரி கும்பலோட வேலையே பொம்பளைங்கள படம் பிடிச்சி நெட்ல போடுறதுதான்.....

பொதுவா பொண்ணுங்க தனியா இருக்கிறப்ப தன்னை யாரும் பாக்குறாங்களா னு செக் பண்ணிக்கிறது நல்லது, பஸ்ல போறப்ப நல்லா இழுத்து மூடிக்கிறதும் நல்லது....

முந்தி எல்லாம் ஆபாசமா பேசுறது, அல்லது மெசேஜ் அனுப்புறது னு இருந்தானுங்க, இப்போ ஆபாசமா படம் எடுக்க ஆரம்பிச்சிட்டானுங்க....



 



  

 
பொது மக்கள் நீங்க உங்க பிள்ளைகளை அழைச்சிக்கிட்டு போகும் போது ரொம்ப கவனமா இருக்கணும். கூட்டமான இடத்துக்கு போகும்போதும் அக்கம் பக்கம் ரொம்ப கவனமா இருக்கணும்....

அவங்க படம் பிடிக்க போறது நம்மோட உறவுகளாகவும் இருக்கலாம், அவங்களை கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம், ஆனா நம்ம அம்மா, நம்ம அக்கா, நம்ம தங்கச்சி, நம்ம பாட்டி, நம்ம பெண் உறவுகள், உங்க காதலி, உங்க மனைவி சரியான பாதுகாப்பான டிரெஸ் போட்டிருந்தா பயம் இல்லாம போகலாமே...
இந்த விஷயத்தை நான் என் உறவுகள் கிட்டே சொல்லிட்டேன், நீங்க உங்க உறவுகள், நண்பர்கள் கிட்டே சொன்னா அவங்க மூலமா இன்னும் ஆயிரமாயிரம் பெண்கள் பாதுகாப்பா இருக்கலாமே....

மேல உள்ள படங்கள் அனைத்தும் எனது நண்பன் திரு.ஐயம்பெருமாளின் உதவியோடு பெறப்பட்டது. அவர் இணையதளத்தில் இருந்து எடுத்ததாக சொன்னார்.....

3 comments:

  1. என்ன செய்ய இது போன்ற வக்கிர எண்ணம் கொண்டவர்களுக்கு கண்டிப்பாக கடுமையான தண்டனை தரவேண்டும்..

    ReplyDelete
  2. உண்மைலேயே....சிறந்த படைப்பு...

    ReplyDelete
  3. தொடரட்டும் உங்கள் பணீ

    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...