பங்காளிங்க..

Thursday, May 26, 2011

குசும்பனும், விசும்பனும்

செய்தி : - சமச்சீர் கல்வித் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது 

(தலைப்பு செய்தியை படித்துக்கொண்டே) 

குசும்பன் - டேய் மச்சான், எவ்ளோ டா கொடுப்பாக?     

விசும்பன் - என்னது , கொஞ்சம் தெளிவா கேளுப்பா? 

குசும்பன் -  அட "சீர்" "சீர்" னு போட்டிருக்காகளே, அதைத்தான் கேட்டேன்....

விசும்பன் - எல்லாத்தையும் சேர்த்து படி பா? 

குசும்பன் - கல்யாண சீர், பிரசவ சீர்னு போட்டிருக்கு, அப்போ மட்டும் சீர் வருமா னு பார்குறியே, அதுதானே இதுவும்

விசும்பன் - அட இது வேற பா?, உலகம் தெரியாத ஆளா இருக்கியே பா?

குசும்பன் - அப்படீன்னு என்னான்னு நீ சொல்லு பாப்போம், 

விசும்பன் - எல்லா பாடத்திட்டமும் சமமா இருக்கும், 

குசும்பன் - அப்படீனா ச யி ன் ஸ், மேத்ஸ் , பிசிக்ஸ், கெமிஸ்ட்ரீ, பயோலோஜி , தமிழ், இங்க லீ பீ சு, அக்கௌண்ட்ஸ் அல்லாமே சமமா இருக்குமா மச்சான்? அப்படீனா ஒரே ஒரு நோட்டு  வச்சு  எழுதினா  போதுமா  டா

விசும்பன் - அது இல்லே மாமு, தமிழ் நாட்டுல இருக்கிற எல்லா பள்ளிகூடத்திலேயும் ஒரே மாதிரி பாடம்தான் இருக்கும்....

குசும்பன் - அப்படீனா பசங்க எந்த ஸ்கூலிலேயும் போய் அவன் அவன் சௌகரியத்துக்கு போய் படிக்கலாமுன்னு சொல்லு,

விசும்பன் - ஐயோ மாமு, உனக்கு எப்படி புரிய வைக்கிறது? அந்தந்த ஸ்கூல் லே படிக்கிற பிள்ளைங்க அங்கேயே படிக்கலாம், ஆனா ஒரே பாடம்தான் எல்லா ஸ்கூல் லேயும் டா... 

குசும்பன் - ஏற்கனவே புத்தகமெல்லாம் அடிச்சாச்சு னு படிச்சோமே டா, அதெல்லாம் அந்த கல்யாண மண்டபத்துல வச்சிடுவான்களா மச்சான்,     

விசும்பன் - எந்த கல்யாண மண்டபம்டா? 

குசும்பன் - அதான் ஒரு 1000 கோடி ரூபாயிலே ஓமந்தூரார் மாளிகையிலே கட்டுனாங்களே, அதைத்தான் சொன்னேன், 

விசும்பன் - டேய், நீ வீணா என் வாயை கிளறாதே? அது அப்புறம் 

குசும்பன் - அப்படீனா வேற எப்படி சொல்லலாம், மச்சான்?

விசும்பன் - இந்த திட்டம் வந்தா எல்லா பசங்களுக்கும் படிக்கிறதுக்கு ஈசீயா இருக்கும்டா...

குசும்பன் - எல்லாம் சரி, ஆனா இதுக்கு வாத்தியாருங்க ஸ்கூல்லே இருக்கணுமே, நாம படிகிரப்ப அந்த பிச்சைமுத்து  வாத்தியாரு மட்டும்தானே ஒன்னாப்பிலே இருந்து அஞ்சான் கிளாஸ் வரைக்கும் எடுத்தாரு, 

விசும்பன் - ஏண்டா அரசாங்கம் மாதிரியே நீயும் குழப்பிகிட்டே இருக்கிறே? 

குசும்பன் - இதுல குழப்பம் எதுக்குடா....ஸ்கூல்ல சீட் கிடைக்காதவன் என் பொண்ணுகிட்டே வந்து படிக்க வேண்டியதுதானே, அவதான் இப்போ பநெண்டாம் வகுப்புக்கும் கிளாஸ் எடுக்கிறாளே.

விசும்பன் - டேய், உன் பொண்ணு எட்டாம் கிளாஸ் தானடா படிக்கிறா, அவ எப்படிடா பனிரெண்டாம் கிளாஸ்க்கு எடுக்க முடியும்,

குசும்பன் - இப்போதானடா நீ சமச்சீர் பாடத்திட்டம் னு சொன்னே, எட்டாங்கிளாஸ், பனிரெண்டாம் கிளாஸ் எல்லாத்துக்கும் ஒரே பாடம், சமச்சீர் பாடம்னு சொன்னியே, என்னை ஏமாத்த முடியுமா? எப்படியும் நான் இந்த வாட்டி அந்த சீரை வாங்கிடுவோம்ல, என்னையவே ஏமாத்த பாக்குறியா? சீரை சமமா பிரிச்சி கொடுப்பாங்க, உனக்கு ரேசன் கார்டு கிடையாது,  அந்த வயித்தெரிச்சல்  உனக்கு 

விசும்பன் - ???????!!!!!!!?????  

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...