பங்காளிங்க..

Wednesday, May 25, 2011

*****முதன் முதலாய்******

அன்றுதான் அவளைச்  சந்தித்தேன்;
முதல் சந்திப்பிலேயே அவள் புன்னகைத்தாள்;

அழகான முகம்,
அடர்த்தியான கேசம்,
நட்சத்திரம் மின்னும் கண்கள்,
ஆப்பிள் போன்ற கன்னங்கள்,

புன்னகையில் பூத்தமலர்களாய்-
கன்னத்தில் விழும் குழிகள்,

அவள்கை விரல்தனை நீட்டி
என்னை அருகில் அழைத்தாள்;                    

அருகில் சென்றேன், அவளை மார்போடு அணைத்தேன்,
அவளது உச்சி முதல் பாதம் வரை 
முத்தமிட்டு அவள் காதில் சொன்னேன்;

இனியும் உன்னை பிரிய மாட்டேன்!!!!

என் அன்பு மகளே........   
  

இந்த வரிகள் அனைத்தும் வயிற்று பிழைப்பிற்காக சொந்த பந்தங்களை தொலைத்து வெளிநாடுகளில் வேலை பார்க்கும் எனது அன்பு தோழர்களுக்கு சமர்ப்பணம்........

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...