பங்காளிங்க..

Friday, May 27, 2011

விஜயகாந்தின் கண் திறந்த பேட்டி

நடந்து முடிந்த தேர்தல் 2011 க்கு பிறகு முதல் முறையாக விஜயகாந்த் வடிவேலு பற்றி நமது சின்னவரிடம் பேட்டி அளித்திருக்கின்றார்..

சினிமாவில் அவரது வசனங்கள் அதிகம் இருக்காது, அது போலவே இந்த பேட்டியிலும் அவர் நறுக்கென்றே பதில் அளித்தார்...

   
பேட்டி வருமாறு -  

சின்னவர் - வணக்கம் கேப்டன், முதலில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்றதற்கு எங்களது வாழ்த்துக்கள்...

கேப்டன் : நன்றி, அதற்கு முதலில் எனது தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும், கூட்டணி கட்சி தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்...

சின்னவர் : தேர்தல் பிரச்சாரத்துல நீங்க இன்னொரு கட்சி கொடிய கீழே இறக்க சொன்னீங்களாமே, அது ஏன்னு இன்னும் பொது மக்கள் கிட்டே சந்தேகம் இருக்கு

கேப்டன் : இது எதிர்க்கட்சிக்காரன் செய்த சதிவேல, 
சின்னவர் : கருணாநிதியோட கடந்த கால ஆட்சிய பத்தி நீங்க என்ன நினைகிறீங்க,

கேப்டன் : அது ஒரு குடும்ப ஆட்சி, அது ரொம்ப தப்பு, ஒரு குடும்பத்துக்கு ஒருத்தன்தான் தலைவனா இருக்கணும், இது சம்பந்தமா நான் என் மனைவிகிட்டேயும், என் மச்சான் கிட்டேயும் கலந்தாலோசிச்சு முடிவு எடுக்க போறேன்...

சின்னவர் : எதிர்க்கட்சி தலைவரா ஆன பிறகு சினிமாவிலே நடிப்பீங்களா?

கேப்டன் : நிச்சயம் எல்லாமே அரசர் காலத்து படம்தான், நானே சொந்தமா கதை, வசனம் எழுத போறேன்...டைட்டில் கூட வச்சிருக்கேன்...கொலைஞன், பண்ணர் - மன்னர்

சின்னவர் :  ரொம்ப நல்ல விஷயம், அதற்கு எங்களோட மனமார்ந்த வாழ்த்துக்கள்..

இந்த தேர்தல்ல உங்களை கடுமையா விமர்சிச்சு பேசிய வடிவேலு மேல ஏதாவது வழக்கு போட போறீங்களா? னு உங்க தொண்டர்கள் ரொம்ப ஆர்வமா இருக்காங்க..

கேப்டன் : நிச்சயமா, உங்க மூலமா நான் அவருக்கு சில வாய்ப்புகள் கொடுக்கிறேன், அவருக்கு எது விருப்பமோ அதை தேர்ந்தெடுக்க சொல்லுங்க...


சின்னவர் : எதிர்க்கட்சி தலைவரா நீங்க எழுப்ப போற முதல் கோரிக்கை என்ன? என்ன?
கேப்டன் : எப்போ வீட்டுக்கு விடுவீங்க, வந்து ரொம்ப நேரமாச்சு..

சின்னவர் : சார், இதுதான் கடைசி கேள்வி, இதுக்கு பதில் சொன்னதும் பேட்டியை முடிச்சிக்கலாம்..

கேப்டன் : (கையில் வைத்திருக்கும் பேப்பரை சுருட்டி சின்னவர் தலையில் தட்டுகின்றார்) யோவ், நீ கேட்ட கேள்விக்குத்தான் பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன், சட்டசபை ஆரம்பிச்சதும் நான் வைக்குற கோரிக்கையைத்தான் சொன்னேன்...

சின்னவர் : ஏற்கனவே, நீங்க ஒரு வேட்பாளரை அடிச்சிடீங்க, அதுவே பெரிய பிரச்சினைல இருக்கு, இப்போ பத்திரிகைகாரன வேற அடிக்கிறீங்க,

கேப்டன் : யோவ், என் கையால அடிபட்டா நீ பெரிய ஆளா வருவே பாரு...

பெரியவர் : ரொம்ப நன்றி எதிர்க்கட்சி தலைவரே...

கேப்டன் : கொஞ்ச நேரத்துக்கு என்னை பேட்டி எடுத்தாரே சின்னவரு, அவரு எங்கேய்யா காணோம்? 

பேட்டி குழு : சார், நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அடிச்சீங்களே சின்னவரு, அவர்தான் இப்போ பெரியவரா மாறிட்டாரு, நீங்கதானே பெரிய ஆளா மாறுவே னு சொன்னீங்க, அதுக்குள்ளே மாறிட்டாரு...
 

No comments:

Post a Comment

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...