பங்காளிங்க..

Wednesday, October 10, 2012

கள்ள நோட்டு, பராக், பராக்!!!!

இந்தியாவில் கள்ள நோட்டுக்களின் புழக்கம் சர்வ சாதாரணமாய் வெளி வருகின்றது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது நமது சில்லறை வணிகர்களும், நடைபாதை வணிகர்களும் மட்டுமே. காரணம் இவர்கள் மட்டுமே பொருளுக்குரிய பணத்தை நேரிடையாக பெறுகின்றார்கள். பெரிய நிறுவனங்கள் காசோலை, கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு என்று பணத்தை நேரிடையாக பெறாமல் பெருமளவில் தப்பித்து விடுகின்றார்கள்.

நிறைய தடவை கடையில் இருப்பவர்கள், ரூவாய் நோட்டை அப்படி மேலே தூக்கி சிறிது நேரம் பார்த்து விட்டு அப்படியே கல்லாப் பெட்டிக்குள் போட்டு விடுவார்கள். எப்படி நல்ல நோட்டு என்று அடையாளம் கண்டுகொண்டீர்கள் என்று கேட்டால் சொல்லத் தெரியாது. சும்மா அப்படி பார்க்க வேண்டியது, பிறகு எதிராளியை ஒருமுறை பார்க்க வேண்டியது...பின்னர் அப்படியே உள்ளே போட்டுக் கொள்வார்கள்.

இதற்க்கு தற்போது ஒரு புது வழி இருக்கின்றது. இதனை ஆர்பீஐ, அதாங்க ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, எப்படி நல்ல அல்லது கள்ள நோட்டு என்று கண்டுபிடிக்க ஒரு வழியினை அமைத்துக் கொடுத்திருக்கின்றது. இதனை நகல் எடுத்து கடைகளில் ஒட்டி வைத்துக் கொண்டால் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அதற்க்கு கீழே இருக்கும் லின்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.. 

1 comment:

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...