பங்காளிங்க..

Tuesday, October 9, 2012

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


 அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது
….!
வசதியாகத்தான் இருக்கிறது மகனே

நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை

ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது
, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது
!

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்
!

 
இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்
!

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்

உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
 

நான் கற்றுக்கொடுத்தேன்
உனக்கு

வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு

உறவுகள் இதுதானென்று
!

3 comments:

  1. நெகிழ்ச்சியான கவிதை..
    ஒவ்வொன்றையும் படிக்கும் போதும் மனம் கணக்கிறது..

    அதிலும் முதல் கவிதை
    சிறியவனாய் இருந்த மகனின் ஏக்கம் தற்போது முதுமையில் தந்தைக்கு இருப்பதாக உவமைப்படுத்தியிருப்பது அழகு...

    முதியோர்கள்
    காப்பத்தில் விடவேண்டியவர்கள் அல்ல...
    காக்கப் படவேண்டியவர்கள்

    ReplyDelete
  2. Excellent....

    Hemanth.

    ReplyDelete
  3. யதார்த்தம். இந்த எதிர்வினை எல்லோரும் நினைப்பத்துதான், அதை அழகான கவிதையாக வடித்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்


    ReplyDelete

நிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...